கரியமில வாயு வெளிவிடாத கான்கிரீட்

1 Min Read

கான்கிரீட் கலவையைத் தயாரிக்க இன்றிய மையாதது சிமென்ட். சிமென்ட் உற்பத்தியில் அதிக அளவிலான கரியமிலவாயு வெளியிடப் படுகிறது. இது புவி வெப்பமயமாதலை அதி கரித்து, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கிறது. இதற்கு மாற்றாகப் பல்வேறு புதிய கண்டு பிடிப்புகள், தொழில்நுட்பங்கள் கான்கிரீட் தயா ரிப்பில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
சமீபத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறு வனம், சிமென்ட் பயன்பாட்டைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக டைகால்சியம் சல்ஃபேட் (γ-சி2ஷி) எனும் வேதிப் பொருளைக் கலந்தது. பொதுவாக கான்கிரீட் உறுதி அடைவதே கான்கிரீட்டில் உள்ள நீரும், சிமென்ட்டும் இணைந்து வேதிவினை புரிவதன் வாயிலாகத் தான். இந்த வேதிவினையில் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.

ஆனால், -C2S,, நீரை விடுத்து சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவுடன் வினைபுரிந்து உறுதி அடைகிறது. கரியமில வாயு அதிகளவில் வெளியிடப்படுகின்ற அனல்மின் நிலையம் முதலிய இடங்களில் -C2S, கலந்த கான்கிரீட்டில் சுவர்கள், கட்டடங்கள் கட்டினால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது.
இந்த வகை கான்கிரீட் சாதாரண கான்கிரீட்டின் வலிமைக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பது கூடுதல் சிறப்பு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *