பொன்னமராவதியில் சுயமரியாதை இயக்கம் ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா

1 Min Read

பொன்னமராவதி, மே 16- புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடி அரசு நூற்றாண்டு விழா பரப்புரை பெரு முழக்கக் கூட்டம் பொன்னமரா வதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.

ஒன்றிய கழக தலைவர் சித.ஆறு முகம் தலைமை வகித்திட ஒன்றிய கழக துணைத் தலைவர் க.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், மாநில ப.க.துணைத்தலைவர் அ.சரவ ணன், பொதுக்குழு உறுப்பினர் சு.தேன் மொழி, மாவட்ட துணை செயலாளர் வெ.ஆசைத்தம்பி, ஒன்றிய செயலாளர் வீ.மாவலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்க வுரையாற்றினார். நிறைவாக கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரை யாற்றினார்.
அவர் தனது உரையில் சுயமரியாதை இயக்கத்தின் சமூகப்பணியிணை எவ் வாறு அமைதிப் புரட்சியின் மூலம் தந்தை பெரியார் செய்து காட்டினார் என்பதையும், குடி அரசு நாளேட்டின் மூலம் பகுத்தறிவு கருத்துக்களையும், சமூகநீதி மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு செய்திகளும் எவ்வாறு பரப்பப்பட்டு பயனளித்தது என்பதையும் விரிவாக பேசினார்.

இந்த நிகழ்வில் தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் கருப்புச் சட்டை தென்னரசு, ஆலவயல் முரளி சுப்பையா, தட்சிணாமூர்த்தி,மா.சுரேஷ், பாண்டியன், ஆட்டோ பன்னீர், வி.சி.க. சார்பில் நகர செயலாளர் மலை.தேவேந் திரன், வை.சுடர்வளவன், சுரேஷ், சேது ராமன், மலை.செந்தில்குமார், ம.தி.மு.க. சார்பில் நாகராஜ், சி.பி.எம். சார்பில் ஒன்றிய செயலாளர் பகுருதீன், வெள் ளத்துரை, கழக மகளிரணி வசந்தா வீரப்பன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் குட்டி வீரமணி, அம்சத் கான், பாலச்சந்தர், புனிதன், சுந்தரி, இனியன், மகிழன் உள்ளிட்ட கழகத் தோழர்களும், ஏராளமான பொது மக்களும் திரண்டு நின்று பரப்புரையை கேட்டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ஆ.மனோகரன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *