அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 20

viduthalai
2 Min Read

சென்னை,மே16- அரசு கலைக் கல்லூரிகளில் சேரவிண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதில் பி.காம், கம்ப் யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு அதிக போட்டி நிலவுகிறது. விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

அரசு கலைக்கல்லூரிகள்

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 164 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. அங் குள்ள 140 பாடப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் படிக்க முடியும். இந்த கல்லூரிகளில் சேரு வதற்கு மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணைய தளம் மூலம் மட்டுமே விண்ப்பிக்க முடியும்.
அதில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த 6ஆம் தேதியே விண்ணப்பிக்கும் பணியும் தொடங்கியது.
இதுவரை மொத்தம் 1 லட் சத்து 81 ஆயிரம் பேர் விண் ணப்பம் செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் பணம் செலுத்தியுள்ளனர்.

பி.காம், கம்ப்யூட்டர் பாடங்களுக்கு ஆர்வம்

இந்த இணையதளத்தில் ஒரு மாணவர், எத்தனை அரசு கல்லூரிகளிலும், எத்தனை பாடப் பிரிவுகளிலும் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு ஒரு மாணவர் 5 பாடப்பிரிவுகளுக்கு விண் ணப்பிக்க ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு எத்தனை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தாலும் ரூ.50 மட்டும் கட்டணம் செலுத்தி னால் போதும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் வெறும் 2 ரூபாய் மட்டுமே.

முந்தைய ஆண்டுகளை போல இந்த ஆண்டும் மாண வர்கள் பி.காம் மற்றும் கம்ப் யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதன் வெளிப்பாடாக அரசு கல்லூரிகளில் விண்ணப் பம் செய்தவர்கள் இந்த பாடப் பிரிவுக்கே அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக கணக்கு மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து விண்ணப்பம் செய் துள்ளனர்.
வருகிற 20ஆம் தேதி தான் விண்ணப்பிக்க கடைசி நாளா கும். எனவே இதுவரை விண்ணப்பம் செய்தாவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் கேட்டு கொண்டுள்ளது.

தரவரிசைப் பட்டியல்

கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் விண்ணப்பிக் கும் தேதி தொடர்ந்து நீட்டிக் கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டதால் மே 20ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பம் செய்வதற்கான தேதி நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
வருகிற மே 24ஆம் தேதி மாணவர்களின் தரவரிசை பட்டியல் சம்பந்தப்பட்ட கல் லூரிகளுக்கு அனுப்பப்படும். 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெகிறது.

அதில் மாற்றுத் திறனா ளிகள், விளையாட்டுப் பிரிவு, தேசிய மாணவர் படை மற்றும் மேனாள் ராணுவனத்தினர் பிள்ளைகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். அடுத்த மாதம் (ஜூன்) 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வு நடை பெறும். 2ஆம் கட்ட கலந் தாய்வு 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்கிறது. ஜூலை மாதம் 3ஆம் தேதி கல்லூரி வகுப்புகள் தொடங் கும் என்று அறிவிக்கப் பட் டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *