மும்பை, மே.16- ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான் மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர்மோடி பேசினார்.
பட்ஜெட்டில் 15 சதவீதம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகி றார். நேற்று (15.5.2024) அவர் மராட் டிய மாநிலம் நாசிக் மாவட்டம் பிம்பல்கால் பகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மற் றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர் களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது:-
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க திட்டமிட்டிருந்தது. நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இந்த திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வர இருந்தது.
காவலாளி மோடி
காங்கிரசின் இந்த திட்டத்தை பா.ஜனதா கடுமையாக எதிர்த்தது. எனவே, அவர்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறது. அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீடுக்கு எதிராக இருந்தார். ஆனால் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி… இதர பிற்படுத்தப்பட் டவர்களின் இடஒதுக்கீடு உரிமையை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்க விரும்பியது. சமூகத்தில் பிற்படுத்தப்பட் டவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் காவலாளி மோடி, மத அடிப்படையில் பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் இட ஒதுக்கீட்டை நான் ஒருபோதும் அனு மதிக்க மாட்டேன்.
நாட்டுக்காக வலுவான முடிவுகளை எடுக்கும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது.
எதிர்க்கட்சி அந்தஸ்தாவது…
கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசு மதத்துக்கு அப்பாற்பட்டு இலவச ரேஷன், தண்ணீர், மின்சாரம்,வீடு, சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி உள்ளது. நலத்திட்டங்கள் எல்லோ ருக்கும் உருவாக்கப்படுகிறது. மராட் டியத்தைசேர்ந்த ”இந்தியா’ கூட்டணி தலைவருக்கு (சரத்பவார்) காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடையும் என்பது நன்றாக தெரியும். எனவே காங் கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக அக்கட்சியுடன் சிறிய கட்சிகள் கரம் கோர்க்க வேண்டும் என அவர் பரிந் துரை செய்தார்.
போலி சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா) காங்கிரசுடன் இணைந்த நிலையில், நான் பால்தாக்கரேயை நினைவு கூறுகிறேன். அயோத்தி ராமன் கோவில், 370-வது சட்டப் பிரிவு நீக்கம் அவரின் கனவாக இருந்தது. தற்போது போலி சிவசேனா காங்கிரசிடம் சரண் அடைந்து விட்டது. மராட்டிய மக்கள் அவர்களை தண்டிக்க முடிவு செய்து விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மும்பையை அடுத்த கல் யாணில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங் கேற்று பேசினார். அப்போது அவருக்கு கதாயுதம் நினைவு பரிசாக வழங்கப் பட்டது. இதில் மராட்டிய முதல மைச்சர் ஏக்நாத் ஷிண்டேயும் கலந்து கொண்டார்.
மும்பையில் பிரதமர் மோடி நேற்று (15.5.2024) பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.