மனிதநேய செயல் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் கொடை மூன்று பேருக்கு மறுவாழ்வு

viduthalai
1 Min Read

சென்னை, மே 16 சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடையால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள் ளது. கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணத்தை சேர்ந்த ஏ.கருணாகரன் (30) என்பவர், செங் கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சேலம் மைன்ஸ் என்ற நிறுவனத்தில் போக்கு வரத்து அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
கடந்த 11ஆ-ம் தேதி சாலைவிபத்தில் பலத்த காயமடைந்த அவர், சென்னை போரூரில் உள்ள சிறீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருந்த தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந் துள்ளது. மனைவி மலர்விழி 4 மாத கர்ப் பிணியாக உள்ளார்.

இந்த நிலையிலும் அவரது மனைவி, பெற்றோர் அனந்த கிருஷ்ணன் மற்றும் இன்பவள்ளி, 2 சகோதரர்கள் கருணாகரனின் உடல் உறுப்புகளை கொடை செய்ய முன் வந்தனர். இதையடுத்து, கருணாகரனிடம் இருந்து சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், இதய வால்வுகள் கொடையாக பெறப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *