பெரியார், அண்ணா, கலைஞர் பேசியதையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, செப். 8 – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நேற்றுடன் (7.9.2023) ஓராண்டு நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நினைவுப் பேரணி நடத்த அறிவுறுத்தப்பட்டி ருந்தது.

அதன்படி, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் வண்ணை அஞ்சல் நிலையம் அருகே தொடங்கி தண்டையார்பேட்டை பேருந்து நிலை யம் வரை பேரணி நடைபெற்றது. 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேரணியை தொடங்கி வைத்ததோடு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், இந்திய ஒற்றுமை பயணத்தில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண் டவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

பெரம்பூரில் பேரணியை தொடங்கி வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, “நாட்டில் ஜாதி, மத, மொழியின் பெயரால் மக்களை பிரிக்கிறார்கள். இன்றைக்கு இந்தியா வல்லரசாக உள்ளது என்று சொன்னால் அதற்கு காங்கிரஸ் கட்சியின் தியாகம்தான் காரணம். தற்போது, இந்தியா கூட்டணி வலிமை யான கூட்டணியாக உள்ளது.

எல்லா கட்சிகளும் இதில் இணைந்துள்ளார்கள். 

கண்டிப்பாக இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடையும். 70 ஆண்டு காலமாக பெரியார் எதை பேசினாரோ அண்ணா எதை பேசினாரோ கலைஞர் எதை பேசினாரோ அதைத்தான் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார்.

இதற்கு ஏன் பா.ஜ.க.வினர் இப்படி குதிக்கிறார்கள் என தெரியவில்லை” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *