மூன்றாவது கட்ட தேர்தலுக்குப் பிறகு அச்சத்தால் காங்கிரஸ் தலைவர்களை வசை பாடுகிறார் மோடி காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டி

Viduthalai
1 Min Read

அய்தராபாத்,மே 11- மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு மோடியும், அமித்ஷாவும் கவலையில் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித் துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், 4-ஆம் கட்ட தேர்தல் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மூன்று கட்ட தேர் தல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் கவலையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர் சித்துள்ளார். இது குறித்து அய்தரா பாத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“பா.ஜ.க.வினர் தங்கள் ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசாமல், காங் கிரஸ் தலைவர்களின் பேச்சுக்களை திரித்துப் பேசி, காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து வருகின்றனர்.

மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு மோடியும், அமித்ஷாவும் கவலையில் இருக்கின்றனர். அவர்கள் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து பேசுவதை நிறுத்திவிட்டனர். காங் கிரஸ் கட்சியை விமர்சிப்பதை மட் டுமே தற்போது செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடிக்கு மாங்கல்யம், மட்டன் மற்றும் முகலாயர்கள் ஆகிய 3 வார்த்தைகள் மிகவும் பிடித்த மானவை. குழந்தைத்தனமான விமர் சனங்களை முன்வைப்பது ஒரு பிரத மருக்கு உகந்தது அல்ல.” இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *