பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

1 Min Read

அரசியல்


திருச்சி, செப், 9
– திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட் டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாண வியர்களுக்கு திருச்சி மேயர் மு.அன் பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விலையில்லா மதி வண்டி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநக ராட்சி மேயர் மு.அன்பழகன் தூய்மை உறுதிமொழியை வாசிக்க மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் உறுதி மொழியை ஏற்றனர். 

இந்நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் பள்ளித் தலைமை யாசிரியை சு.பாக்கியலெட்சுமி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பள்ளியில் பயிலும் பல்வேறு செயல்பாடுகளில் உள்ள மாணவி யர்கள் மிகுந்த கரவொலியுடன் வர வேற்றனர்.

பல்வேறு பணிக்களுக்கு இடையில் பள்ளிக்கு வருகைபுரிந்து மிதிவண்டி வழங்கிய திருச்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய் மற்றும் கோட்டத் தலைவர் துர்கா ஆகியோருக்கு  தொழிற்கல்வி ஆசிரியர் அ.அருள் ராணி நன்றி கூற  நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *