புதுடில்லி, மே 7- ஒன்றிய அரசு உள்நாட்டு சந்தையில் வெங்காய விலையை கட்டுக்குள் வைக்கவும், போதிய அளவு கையிருப்பை உறுதி செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்ததால் அண்டை நாடுக ளில் வெங்காயம் விலை உயர்ந்தது.
கடந்த மாத இறுதியில் வங்கதே சம், அய்க்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீசியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடு களுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.இதைத் தவிர மத்திய கிழக்கு மற் றும் சில அய்ரோப்பிய நாடுகளுக்கு 2,000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வும் ஒன்றிய அரசு அனுமதி அளித் தது.
5.5.2024 அன்று வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால், வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை டன் ஒன்றுக்கு 550 டாலராக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டிருப்பது தொடர் பாக ‘எக்ஸ்’ தளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைத் தளத்தில் ” காங்கிரஸ் கட்சி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி நமது விவசாயிகளுக்காக மகத்தான வெற்றியை பெற்றுள் ளது. பல மாத அழுத்தத்திற்குப் பிறகு, மோடி அரசு வெங்காய ஏற் றுமதி மீதான தடையை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளின் பிரச்சினைகளில் பிரதமரின் அக்கறையின்மை இன் னும் தொடர்கிறது. வெங்காய ஏற்றுமதிக்கான 40% ஏற்றுமதி வரியை ஒன்றிய அரசு அப்படியே வைத்திருக்கிறது.
பாரத் ஜோடோ நியாய நடைப் பயணத்தின் போது ராகுல் காந்தி அறிவித்தபடி விவசாயப் பொருட் களுக்கான நிலையான இறக்குமதி-ஏற்றுமதி கொள்கையை உருவாக்கு வோம் என காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளித்தது. ஜூன் 4-ஆம் தேதி’இந்தியா’ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் போது, இந்த கொடூரமான மற்றும் தன் னிச்சையான ஏற்றுமதி தடைகள் மற்றும் வரிகள் நீங்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.