தமிழ்நாட்டில் 2,000 மெகாவாட் திறன் சூரியசக்தி மின் நிலையம் மின்வாரியம் முடிவு

1 Min Read

அரசியல்

சென்னை,செப்.10 – தமிழ்நாடு முழுவதும் சூரியசக்தி பூங்கா திட்டம் மூலம் 2,000 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சூரியசக்தி பூங்கா திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி அதன் மூலம் 2,000 மெகாவாட் திறனில் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பைக் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியிட்டது.

மின் உற்பத்தி செய்ய ஒரு மெகாவாட்டுக்கு 5 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பதால், துணைமின் நிலையங்களுக்கு அருகில் நிலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மின்வாரியம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், கரூர், சேலம், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் தலா 50 முதல்100 மெகாவாட் என 2,000 மெகாவாட் திறனில் மின் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதில், முதல் பூங்காவை திருவாரூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *