நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரிப்பு : சித்தராமையா

1 Min Read

தேவன்கரே, மே 6 கருநாடக முதலமைச்சர் சித்தராமையா நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா தேவன்கரே தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் , “பாஜகவின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருநாடக மாநிலத்திற்கு இழைக் கப்பட்ட அநீதிகள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பியதில்லை. பாஜக தங்கள் கட்சியின் உறுப் பினர்களை. கைவிட்டு விட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு வாக் குறுதிகளை நிறைவேற்றக்கூடிய அரசு. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. நாடெங்கும் மக்களவை மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டது. இதை பா.ஜ.க. உணர்ந்துள்ளது.

எனவே தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினரை இஸ்லாமியர் களுக்கு எதிராக திருப்பிவிடும் வேலையை பா.ஜ.க. செய்து வரு கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு சதவிகி தத்தை அதிகரிப்போம் என்று கூறினோம். அதை நாங்கள் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோரிடம் இருந்து இட ஒதுக் கீட்டை பறித்து இஸ்லாமியர் களுக்கு கொடுத்து விடுவோம் என்று கூறியதாக பிரதமர் மோடி மிகப்பெரிய பொய்யை கூறி யுள்ளார். நாடு இந்த அளவிற்கு பொய்களை கூறும் பிரதமரை இதுவரை பார்த்ததில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *