கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

3.5.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை காப்பாற்ற பிரதமர் மோடி ஏன் முயல்கிறார் என்பதற்கு மக்களிடம் அவர் பதில் அளிக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தல்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
♦ காவிரி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடக் கோரி கருநாடக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் போராடும் என செல்வப்பெருந்தகை பேட்டி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦”வேறு எந்த பிரதமரும் இப்படி பேசியதில்லை. மோடி அரசின் டில்லி முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கையால் பஞ்சாப் மற்றும் அரியானா போன்ற மாநிலங்களை கோபப்படுத்தி உள்ளனர், மேலும் அவர்கள் தென் மாநிலங்கள் அல்லது மேற்கு வங்கம் அல்லது சிறுபான்மையினரின் வாக்குகள் மற்றும் பலவற்றை பெற மாட்டார்கள். அவர்கள் 230-240 இடங்களை தாண்ட மாட்டார்கள் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கிறேன்,” என்று பவார் கூறினார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ பாஜக அரசுக்கு எதிராக ஜார்கண்ட் மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றும், அதன் வளமான கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் அந்த கொடுங்கோல் சக்தியை தூக்கி எறிவார்கள் என்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் ஆவேசம்.
♦ பிரஜ்வல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ‘டிப்ளமெட்டிக்’ பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனி பறந்துள்ளார். டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்ப வர்கள் பல நாடுகளுக்கு விசா எடுக்காமலே செல்லும் வசதி உள்ளது. இதனால் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை அவர் பெறவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
♦ இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது ஆர்.எஸ்.எஸ்-இன் அடிப்படை சித்தாந்தம், அது பாஜகவின் செயல்திட்டம்: ரேவந்த் ரெட்டி பேச்சு.
தி டெலிகிராப்:
♦ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது – வாக்கு எண்ணிக்கை குறித்து மம்தா சந்தேகம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *