பெருந்துறையில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா

1 Min Read

பெருந்துறை, மே 3 – “சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற் றாண்டு” தொடங்கியதை முன் னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந் துறை பழைய பேருந்து நிலையம் அருகில் 2.5.2024 அன்று மாலை 6 மணிக்கு நூற்றாண்டு தொடக்க விழா கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி செய லாளர் நா.மோகன்ராஜ் தலைமை தாங்கினார், பவானி அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். கழகப் பேச்சாளர் கோபி வெ. குமாரராஜா, தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண் முகம் ஆகியோர் “சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் வேர்ட் பிரஸ் தந்தை பெரியார் தொடங்க வேண்டிய அக்கால தேவை பற்றியும், அதனால் தமிழ்ச் சமூகம் பெற்ற பயனையும் – இன்றும் முன்பை விட அவற்றின் தேவை அதிகம் என்பதை சிறப்பாக விளக்கினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் இரா. நற்குணன், மாவட்ட செய லாளர் மா.மணிமாறன், மாநகர செயலாளர் தே.காமராஜ், தங்க ராஜ், சீனி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய இளைஞரணி செயலாளர் அன்பு பிரசாந்த் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *