மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய ஆணை

1 Min Read

சென்னை,மே 3- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தாகமுள்ள மக்க ளுக்கு தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் கோரிக் கைக்கு இணங்க தேர்தல் நடத்தை விதிகளின் அடிப் படையில் தண்ணீர் பந் தல் திறக்க எந்த ஆட்சேப னையும் இல்லை. தண் ணீர் பந்தல் அமைப்பதன் வாயிலாக எந்தவொரு அரசியல் ரீதியான செயல் பாட்டிலும் ஈடுபடக் கூடாது. தண்ணீர் பந்தல் திறப்பின்போது தேர்தல் நடத்தை விதிகள் கண் டிப்பாகக் கடைப்பிடிக் கப்பட வேண்டும்.

தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்த வொரு அரசியல் கட்சி யும், வேட்பாளரும், ஆணை யத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங் கத்தின் பிற அறிவுறுத்தல் களைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் கட் சிகளின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர் தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதிக்கலாம்.
அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக் குள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண் ணீர் பந்தல் செயல்பாடு கள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *