டில்லி மகளிர் ஆணையத்தில் பணியாளர்கள் நீக்கம் துணைநிலை ஆளுநர் நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

2 Min Read

புதுடில்லி, மே 3 டில்லி மகளிர் ஆணையத்தில் 52 ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான சுவாதி மாலிவால் கடந்த 2015ஆ-ம் ஆண்டில் டில்லி மகளிர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து டில்லி மகளிர் ஆணைய தலைவர் பதவியிலிருந்து விலகினார். முன்ன தாக சுவாதி மாலிவால் ஆணைய தலைவராக பதவி வகித்தபோது கடந்த 2016-ஆம் ஆண்டில் 223 ஊழியர்களை ஒப்பந்த அடிப் படையில் நியமித்தார். இதுதொடர் பாக டில்லி துணைநிலை ஆளுந ருக்கு அவர் கடிதம் அனுப்பினார். ஆனால் விதிகளை மீறி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதலாக ரூ.2 கோடி செலவினம் ஏற்படும் என்றும் துணைநிலை ஆளுநர் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து 223 ஊழியர் களுக்கான ஊதியம் நிறுத்தப் பட்டது. பாதிக்கப்பட்ட 223 பேரும் டில்லி உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு ஊதி யம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் தரப்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அண்மையில் சமர்ப்பித்த அறிக்கையில், விதிகளைமீறி ஊழி யர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக் கையின் அடிப்படையில் டில்லி மகளிர் ஆணையத்தின் 223 ஊழி யர்களையும் பணிநீக்கம் செய்து துணை நிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மாலிவால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “துக்ளக் தர்பார் ஆட் சியைப் போன்று ஒரே நேரத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை எதிர்த்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து டில்லி மகளிர், குழந் தைகள் மேம்பாட்டுத் துறை அளித்த விளக்கத்தில், “52 பேர் மட்டுமே பணி நீக்கப்பட்டு உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சுவாதி மாலிவால் கூறும்போது, “எனது எதிர்ப்பை தொடர்ந்து 223 பேர் பணி நீக்கம் என்பதை 52 பேர் என்று குறைத்துள் ளனர். தற்போது டில்லி மகளிர் ஆணையத்தில் 38 ஊழியர்கள் மட் டுமே உள்ளனர். 181 மகளிர் உதவி எண், பாலியல் வன்கொடுமை தடுப் புப் பிரிவு, அவசர உதவி மய்யம் ஆகியவற்றை 38 ஊழியர்களால் நடத்த முடியுமா?” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *