இரண்டாம் உலகப்போரின் போது தாய்லாந்து நாட்டில் உயிரிழந்த தமிழர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே நடுகல் முயற்சி!

Viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!

சென்னை, மே 3- இரண்டாம்உலகப்போரின் போது தாய்லாந்து நாட்டில் உயிரிழந்த தமிழர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே நடுகல் முயற்சி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவு வருமாறு:- “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்” என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு! இரண்டாம் உலகப்போரின் போது சயாம் – பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக் கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் ‘நடுகல் விழா’ தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்று ள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன், போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நாடா ளுமன்ற உறுப்பினர் புதுகை அப்துல்லா ஆகியோர் இந்நிகழ் வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமை களுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத் தக்க வீரர்கள்தான். அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக் கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் இந்த நடுகல் முயற்சி. இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *