சேலம் மாநகரில் நடக்க உள்ள (17.12.2023) தி.மு.க. – 2ஆவது மாநில இளைஞரணி மாநாடு விளக்க இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பேரணி தமிழ்நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்யும் நிலையில் – சென்னை சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (26.11.2023) பிரச்சாரம் நடைபெறுகின்றது. சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் காலை 10 மணியளவில் எழும்பூர் தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்து அறநிலையத் துறையின் சென்னை மாவட்ட அறக்காவலர் குழுத் தலைவர் சிவ. இரவிச்சந்திரன் இப்பேரணியைத் தொடங்கி வைத்தார். தி.மு.க. பொறுப்பாளர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் சிலையின் அருகிலிருந்து தி.மு.க. இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு விளக்க சக்கர வாகன பேரணி தொடக்கம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books

