கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதை அறிந்த திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் சம்பந்தபட்ட பிடிஓ-வை தொடர்பு கொண்டு உடனடியாக பிடிஓ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கோயிலை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மாதேஷ் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பிடிஓவிடம் உடனடியாக கோயில் அகற்றப்பட வேண்டும் இல்லையென்றால் வரும் 18.9.2023 அன்று ஒத்த கருத்துள்ள அமைப்புகளை இணைத்துக் கொண்டு பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.