அரசு அலுவலக வளாகத்தில் கோயிலா?

0 Min Read

அரசியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதை அறிந்த திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் சம்பந்தபட்ட பிடிஓ-வை தொடர்பு கொண்டு உடனடியாக பிடிஓ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கோயிலை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மாதேஷ் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட பிடிஓவிடம் உடனடியாக கோயில் அகற்றப்பட வேண்டும் இல்லையென்றால் வரும் 18.9.2023 அன்று ஒத்த கருத்துள்ள அமைப்புகளை இணைத்துக் கொண்டு பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *