புதுடில்லி, ஏப். 27- கணவனுக்கு மனைவி யின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச் சினையால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவா கரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு அவர் தொடர்ந்ததுடன், திரும ணத்தின்போது பெற்றோர் தனக்கு சீதன மாக வழங்கிய நகைகளின் மதிப்பு மற்றும் ரொக்கப்பணத்தை மீட்டெடுக்க மற் றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.
அந்தப் பெண் தனது மனுவில் “திரும ணத்தின்போது எனது குடும்பத்தினர் தனக்கு 89 சவரன் தங்க நகைகளையும், ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும் சீதனமாக வழங்கினர்.
திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத் திரமாக வைப்பதாகக் கூறி என் கணவர் நகைகளை எல்லாம் வாங்கினார். மேலும், நகைகளை அவர் தனது தாயிடம் கொடுத் தார்.
இது குறித்துக் கேட்டதற்கு அப்போது தான் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி சமாதானம் செய்துள் ளார். இருப்பினும், என் கணவரும் மாமி யாரும் எனக்குச் சீதனமாக வந்த நகை களை விற்று அவர்களின் கடன் உள் ளிட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்திக் கொண்டனர். அவற்றை மீட்டுத் தரவேண்டும்” எனக் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன் றம், பெண்ணின் தங்க நகைகளைக் கணவ ரும் அவரது தாயாரும் முறைகேடாக அபகரித்தது நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப் பளித்ததை எதிர்த்து கணவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது.
அப்போது தங்க நகைகளை முறை கேடாகப் பயன்படுத்தியதை அந்த பெண் நிரூபிக்கவில்லை என்று கூறி கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
அந்தப் பெண் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் ஒரு முக்கிய உத்தரவை வழங்கியிருக்கிறது. அதன்படி ஒரு பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வழங்கும் சீதனம் என்பது அந்தப் பெண்ணின் சொத்தா கவே கருதப்படும் என்றும் அதில் கணவனுக்கு எந்த வொரு உரிமையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
மேலும் அந்தப் பெண்ணிடம் இருந்து எடுத்துப் பயன் படுத்திய 89 சவரன் தங்கத்திற்கு நிகராக ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இதை 6 மாதக் காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் அவரது கணவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.