கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

27.4.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத் சபர்கந்தா மக்களவைத் தொகுதி ஷினாவாட் கிராமம் முழுவதும், பாஜகவினர் வரக்கூடாது என சத்திரி யர் சமூகத்தினர் பதாகைகள் வைத்துள்ளதால், பரபரப்பு. அத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஷோப்னா பாரையாவிற்கு பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாக்கு ஒப்புகை சீட்டு வழக்கு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இந்தியா கூட்டணிக்கு முகத்தில் விட்ட அறை என பிரதமர் மோடி பேச்சு. தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தது தான் உச்ச நீதிமன்றம் பாஜகவிற்கு முகத்தில் விட்ட அறை என காங்கிரஸ் பதிலடி – ஒப்புகைச் சீட்டினை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தொடரும் என்றும் பேச்சு.
* அயோத்தி ராமர் கோயில் காட்சிப் பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர், நடத்தை விதிகளை மீறியதற்காக பாஜகவின் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா மீது மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்டதற்கு தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு.

தி டெலிகிராப்:
* ராஜஸ்தானில் மதப்பிரச்சினையை உருவாக்கும் விதத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்பது, அது ஒரு உதவியற்ற பொம்மை என காட்டுவதாக மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கண்டனம்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *