இன்று (27.4.2024) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் 173ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்தியநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.