செய்திச் சுருக்கம்

1 Min Read

உயர்வு
தமிழ்நாட்டில் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிக பட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அறிவுறுத்தல்
தபால் மூலம் 2.48 லட்சம் போக்குவரத்து ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், விண்ணப்பத்தில் பொதுமக்கள் சரியான முகவரியை குறிப்பிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எச்சரிக்கை
திறந்த நிலை, தொலைதூர மற்றும் இணைய வழிக் கல்வி வாயிலாக 10 நாள்களில் எம்.பிஏ படிப்பு என்ற தவறான மாணவர் சேர்க்கை விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இத்தகைய போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று யுஜிசி தற்போது எச்சரித்துள்ளது.
திரும்ப பெறலாம்
மின் வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கு செலுத்திய தேர்வுக் கட்டணத்தைத் திரும்ப பெற வரும் மே – 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தரமற்றவை
சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உறுப்பு மாற்று…
சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியா வரும் அபாயம் உள்ளதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரவு
அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *