இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய டில்லி பல்கலைக்கழக மாணவர்கள்

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப்.24 டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணை யத்துக்கு இரங்கல் தெரிவித்து’ சுவ ரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள் ளனர். ராஜஸ் தானில் 21.4.2024 அன்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “அதிக எண்ணிக்கையிலான குழந்தை களைப் பெற்றவர்கள்” என்று அவர் குறிப்பிட்டார் மற்றும் மேனாள் பிரதமர் மன் மோகன் சிங் (2006 இல்) “நாட்டின் வளங்களில் முதல் உரிமை முஸ்லிம் களுக்கு தான்” என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார். 2024இல் காங் கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத் துக்களை முஸ்லிம் களுக்கு பகிர்ந்தளிக்க அதன் தேர் தல் அறிக்கை முன்மொழி கிறது என்று அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் அறிக் கையில் உள்ள சொத்து சமத்துவமின்மையை நிவர்த்தி செய்யும் பகுதி களை இணைத்து, 2006இல் மேனாள் பிரதமரின் உரை யுடன் அந்த புள்ளிகளை இணைத்து மோடி இவ் வாறு பேசியுள்ளார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள் கண்டனம் தெரிவித்ததோடு மத உணர்வுகளை தூண்டும் விதமாக பேசிவரும் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலி யுறுத்தினர். அவர்களின் இந்த கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் வாயை மூடி இருக்கும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இறந்து விட்டதாக டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் சுவரொட்டி ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *