‘நீட்’ தேர்வு: ராஜஸ்தானில் மாணவி தற்கொலை

1 Min Read

 ஜெய்ப்பூர், செப். 14 – ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜே.இ.இ., நீட் பயிற்சி மய்யங்களுக்கு பிரசித்தி பெற்ற ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2லு லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர், படிப்பு நெருக்கடி தாள முடியாமல் தற்கொலையை நாடும் துயரமும் தொடர்கிறது. இந்த நிலையில் புதிய சோகமாக, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ஒரு 16 வயது மாணவி, தான் தங்கியிருந்த விடுதி அறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரிச்சா சின்கா என்ற அந்த மாணவி, ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்தார். கோட்டாவில் இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள 23ஆவது மாணவர் இவர் ஆவார். மாணவர்களின் தற்கொலை தொடர்வதற்கு, அவர் களுக்கு அவர்களது பெற்றோர் கொடுக்கும் நெருக்கடிதான் முக்கிய காரணம் என பயிற்சி நிலையத்தினரும், காவல் துறையினரும் புகார் கூறுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *