அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு… கடலூரில் 4 பேர் கைது!

Viduthalai
4 Min Read

கடலூர்,ஏப்.24- கடலூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அருகில் உள்ள ஊராட்சி மன்ற கட்டடம் லேசான சேதம் அடைந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பின்புறம் பழைய ஊராட்சி மன்ற கட்டடம் உள்ளது. நேற்று இரவு 12:30 மணியளவில் இங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு ஒன்றை அம்பேத்கர் சிலை மீது வீச முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த குண்டு தவறுதலாக சிலைக்கு பின்புறம் உள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது விழுந்து வெடித்துள்ளது.
நல்வாய்ப்பாக இந்த நிகழ்வில் சிலைக்கும், பொது மக்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீவிர விசாரணை மேற் கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சில ரிடம் விசாரணை நடத்தியதில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து, குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரளாவில் எதிர்க்கட்சியினர் தாக்கியதாக கூறிய
பா.ஜ.க. வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

இந்தியா

திருவனந்தபுரம்,ஏப்.24- கேரளாவில் தேர்தல் பிரச் சாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக் கியதாகக் கூறிய கொல்லம் பாஜக வேட்பாளரும் நடிகரு மான கிருஷ்ண குமாரின் நாட கம் அம்பலமாகியுள்ளது
20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண் டாம் கட்டமாக வரு கிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவி ருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச் சாரம் இன்று (24-04-2024) மாலையுடன் நிறைவடைய வுள்ளது.
அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்த லில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ண குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு நாள்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண் ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தியா

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற் கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ண குமார் புகார் கூறினார்.
இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதி யில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த் தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக் கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ் திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.
இது தொடர்பாக, குந்திரா காவல்துறையினர் விசா ரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்ட தாக வாக்குமூலம் அளித்தார். இதன்மூலம் பா.ஜ.க.வினரின் நாடகம் அம்பலமாகிவிட்டது.

புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் வாகனங்களுக்கான டயர்கள் தயாரிப்பு
மதுரை, ஏப்.24- பயணர்களின் பாதுகாப்பான பயணத் திற்கு ஏற்ற வாகனங்களுக்கான டயர்களை தயாரித்து வழங்கி வரும் பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனம் அனைத்து வகையான கார்களுக்கும் பொருந்தும் வகை யிலான பி£ட்ஜ்ஸ்டோன் டுரான்ஸியா 6அய் என்ற பெய ரிலான புத்தாக்கமான என்லைட்டென் தொழில்நுட் பத்தில் கார்களுக்கான பிரீமியம் டயரை தயாரித்து அறிமுகப்படுத்துகிறது.
எங்களது உத்திசார் முதலீடு அடிப்படையில் மேம் பட்ட தொழில்நுட்பம் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தின் காப்புரிமை தொழில்நுட்பமான என்லைட் டென் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டயர் மேம்பட்ட ஓட்டும் அனுபவத்தை அளிக்கும். இது தவிர இந்திய நுகர்வோர் எதிர்பார்க்கும் அடிப்படை செயல் பாடுகளைக் கொண்டுள்ளது. நீடித்து உழைக்கக் கூடியது. எரிபொருள் சிக்கனத்துக்கு வழிவகுக்கிறது என பிரிட்ஜ் ஸ்டோன் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஹிரோஷி யோஷிஸேன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *