தருமபுரியில் மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
2 Min Read

அரசியல்

தருமபுரி, செப். 14– தருமபுரி மண் டல பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 9.9.2023 அன்று மாலை 4 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில்  மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி  அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் நடைபெற்றது. 

அரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் தீ.சிவாஜி,   திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட கழக தலைவர் கு. சர வணன் செயலாளர் பெ.கோவிந்த ராஜ், ஓசூர் மாவட்ட தலைவர் சு. வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிட மணி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி  தலைவர் அண்ணா துரை, ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

தலைமை கழக அமைப்பா ளர் ஊமை.  ஜெயராமன் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு வழி காட்டுதலுரை நிகழ்த்தினார்.  கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி  சிறப்புரையாற்றினார்.

மாநில பகுத்தறிவு ஆசிரிய ரணி  தலைவர் வா.தமிழ் பிரபாகரன், மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி ஆகியோர் கருத் துரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட் டாரப் பொருளாளர் சிவப்பிர காசம், வட்டார செயலாளர் சீனிவாசன், நகரப் பொருளா ளர் விஜயராகவன், மாணவர் கழகத் தோழர்கள் ச.கி.வீரமணி, ச.அன்புமணி மற்றும் தோழர் கள் பங்கேற்றனர். 

மாவட்டத்தில் ஆசிரியர் அணிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை  பள்ளி எங்கும் மாணவ மாணவிக ளுக்கு இனிப்பு வழங்கி பரிசு பொருட்கள் வழங்கி கொண் டாடுவது, வாய்ப்புள்ள இடங் களில் மாணவ, மாணவிகளுக்கு, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி நடத்தி பரிசளிப்பது, ஆசிரியர் அணி பொறுப்பாளர் கள் அனைவரும் இணைந்து  அரசு மற்ற ஆசிரியர்கள் சந்திப் பது என முடிவு செய்யப் பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *