சென்னை, ஏப்.22- தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட பணத்தை கட்சியினருக்கு வழங்காமல், முக்கிய நிர்வாகிகளே பதுக் கியதாக பா.ஜ.,வில் புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் விவ ரத்தை, அக்கட்சியினர் டில்லி மேலிடத் துக்கு அனுப்பி வருகின்றனர்.
இது குறித்து, பா.ஜ.,வின் சில முக்கிய பிரமுகர்கள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில், பா.ஜ., 19 தொகுதிகளில் நேரடியாகவும், அக்கட்சியின் தாமரை சின்னத்தில் கூட் டணி கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக் கக்கூடாது என்பது பா.ஜ.,வின் கொள்கை. அதேசமயம், தங்களின் தொழில், அதனால் கிடைக்கும் வருவாயை விட்டு, கட்சி வளர்ச்சிக்காக பல தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று, ஒன்றிய அரசின் திட்டங் களை எடுத்து கூறுவது உள்ளிட்ட தேர்தல் பிரச்சார பணிகளில், ஒரு மாதத்துக்கும் மேல் ஈடுபட்டனர்.
அணி மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், ‘பூத் கமிட்டி’ நிர்வாகிகள், இரு ஆண்டுகளாக தங்கள் பகுதியில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.
எனவே, தேர்தலை முன்னிட்டு, ஒரு பூத் கமிட்டிக்கு, 30,000 முதல், 50,000 ரூபாய் வரையிலும், மண்டல அளவில் தலா, 10 – 15 நிர்வாகிகளுக்கு தலா, 20,000 ரூபாய்; மாவட்ட அளவில், 20 – 25 நிர்வாகிகளுக்கு தலா, 30,000 ரூபாய் வரையும் மேலிடம் வழங்கியது.
இந்தப் பணம், வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வாயிலாக, தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சியினரிடம் வழங்க அறிவுறுத் தப்பட்டது. ஆனால், பல தொகுதிகளில் நிர்வாகிகள், மேலிடம் வழங்கிய தொகையை முழுவதுமாக கட்சியினரிடம் வழங்கவில்லை.
பணம் கொடுப்பதைத் ‘தி.மு.க.,வினர் தடுத்து, பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர்; அதனால், பணத்தை கையில் வைத்திருக்க முடிய வில்லை; நீங்கள் தொடர்ந்து தேர்தல் பணி செய்யவும்; தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன் வழங்கப்படும்’ என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் தெரி வித்தபடி பணம் தரவில்லை.
இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர். பல ஓட்டுச்சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள், ஓட்டுப்பதிவின் போது மதி யத்துக்கு மேல் பூத்தை விட்டு வெளியேறி விட்டனர். கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மூன்று, நான்கு தொகுதிகளில் தான், மேலிடம் வழங்கிய தொகை முழுதும் கட்சியினரிடம் வழங்கப்பட்டுஉள்ளது.
பணம் பதுக்கிய தகவலை கட்சியினர், பா.ஜ., மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித் துள்ளனர். அவர்களின் ஆலோசனைபடி தங்கள் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப் பட்டதில் இருந்து, செலவுக்கு வழங்கிய தொகை எவ்வளவு; அதை யார் தங்களிடம் வழங்கியது; பதுக்கிய நபர்கள் உள்ளிட்ட விபரங்களை எழுதி, டில்லி மேலிடத்துக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்தப் புகார்களை, தொகுதி வாரியாக அனுப்பி வருகின்றனர்.
எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, டில்லியில் இருந்து மேலிட தலைவர்கள் விரைவில் தமிழ்நாட்டிற்கு வருவார்கள் எனவும் கூறப்படுகிறது.
-இவ்வாறு அவர்கள் கூறினர்.