புதுடில்லி, ஏப்.22- ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந் தால் வேலைவாய்ப்பு புரட்சியை காங்கிரஸ் ஏற்படுத்தும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறி னார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே தனது ‘எக்ஸ்’ வலைத் தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட் டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி நூற்றுக்கணக் கான பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். அவரது அரசு 10 ஆண்டு களில் எத்தனை பேருக்கு வேலை வழங்கி இருக்கிறது என்று அவர் சொல்லி இருக்கிறாரா? ஆண்டுக்கு 2 கோடி வீதம் 20 கோடி வேலை களை வழங்கி இருக்கவேண்டும். அதற்கு பதிலாக, 12 கோடி வேலை களை பறித்து விட்டது.
வேலைவாய்ப்புதான் இளை ஞர்களுக்கு முக்கியமான தேர்தல் பிரச்சினை. ஒன்றியத்தில் ஆட் சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு புரட்சியை காங்கிரஸ் ஏற்படுத்தும். அதன்மூலம் போட்டித் தேர் வில் இருந்து வேலை கிடைப்பது வரை யிலான பயணம் எளிதாகி விடும்.
30 லட்சம் அரசுப் பணியிடங் களை நிரப்புவதாக காங்கிரஸ் உத் தரவாதம் அளித்துள்ளது. பட்டம், பட்டயம் பெற்ற ஒவ்வொருவருக் கும் ஓராண்டுக்கு ரூ.1 லட்சம் உத வித்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.
தேர்வு வினாத்தாள் கசிவது சம்பந்தப்பட்ட வழக்குகளை விசா ரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இணைய வழி (ஆன்லைன்) உணவு வினியோக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க சட்டம் கொண்டு வரப்படும்.
‘யுவ ரோஷிணி’ திட்டத்தின்கீழ், ஸ்டார்ட்அப் நிதி யில் 50 சதவீத தொகையான ரூ.5ஆயிரம் கோடி, அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும். 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சொந்தமாக வணிகம் தொடங்க லாம். அதை விரிவுபடுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்.
மேலும், ‘அக்னிபத்’திட்டம் ரத்து செய்யப்படும். வேலையின்மை காரணமாக, கடந்த மார்ச் 15 ஆம் தேதிவரையிலான கல்விக்கடன் பாக்கி, வட்டியுடன் தள்ளுபடி செய் யப்படும். அந்த தொகையை வங்கி களுக்கு ஒன்றிய அரசே வழங்கி விடும்.
விளையாட்டு உதவித்தொகை 21 வயதுக்குட்பட்ட திறமையான விளையாட்டு வீரர்க ளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் விளையாட்டு உதவித் தொகை வழங்கப்படும். அரசு தேர்வுகள் மற்றும் பதவிகளுக் கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்.
கரோனா காலத்தில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை அரசு தேர்வு தேர்வுகளில் பங்கேற்க முடி யாத விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முறை மட்டும் நிவாரணம் வழங்கப் படும்.
இந்த வாக்குறுதிகள் அனைத் தும் நிறைவேற்றப்படும்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.