மக்கள் விரோத பா.ஜ.க. அரசே வெளியேறு!

1 Min Read

சிபிஅய் தொடர் மறியல் போராட்டம் – 3  நாள்களில் 

61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மாநில செயலாளர் இரா.முத்தரசன் தகவல்

அரசியல்

சென்னை,செப்.15- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நேற்று (14.09.2023) தமிழ்நாடு முழுவதும் மூன் றாவது நாளாக 50க்கும் மேற்பட்ட மய்யங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் ஜனநாயக வாழ்வுக்கும், கூட்டாட்சி முறைகளுக்கும் ஏற்பட்டுள்ள பேராபத்தை தடுக்கவும், மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவது முன் தேவையாகியுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையில் பொது மக்களின் கவனத்தையும் ஆதரவையும் திரட்டும் வகையில் 12 முதல் 14 வரை மூன்று நாள் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தியது.

தமிழ்நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட மய்யங் களில் நடந்த போராட்டத்தில் 61 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனை வருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி தெரிவிப்பதுடன், கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

-இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *