திமிரடிப் பேச்சு

1 Min Read

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மாநில முதலமைச்சரான மோகன் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தி நமது மதத்தையும், இளைஞர் சக்தியையும், பெண்களையும் இழிவுபடுத்தி வருகிறார். கடந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் தோல்வி அடைந்ததால், தென் மாநிலமான கேரளாவுக்குச் சென்றார். எதிர்காலத்தில் இந்தியாவில் அவருக்கு பாதுகாப்பான தொகுதி இருக்காது. அதனால் கடல் தாண்டி சென்று வேறு எங்காவது போட்டியிட வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார்.

பிஜேபி என்பது ஆணவத்தின் உச்சாணிக்கிளையில் தொங்குகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும். அடுத்த தேர்தலில் பிஜேபி என்று ஒன்று இருந்தால், அது இந்தியாவில் போட்டியிடட்டும். மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஒன்றை ஒப்புக்கொண்டு இருக்கிறார். கடல் தாண்டிக் கூட ராகுல் காந்தி தேர்தலில் நின்று வெற்றி பெறும் சக்தி உடையவர் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்
ஆணவமே, உன் பெயர் தான் பிஜேபியா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *