ஏப்ரல் 24ஆம் தேதி இளநிலை மருந்து ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்

Viduthalai
2 Min Read

சென்னை,ஏப்.20- இளநிலை மருந்து ஆய்வாளர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை மருந்து ஆய்வாளர் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 24ஆம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இணையத்தில் வெளியீடு
இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான அழைப்பாணை கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். அழைப்பாணை அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
மறுவாய்ப்பு இல்லை
தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி ஒதுக்கீடுவழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே பணி ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராத தேர்வர்களுக்கு எக்காரணம் கொண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படாது.

அமலாக்கத் துறையின் வன்மம்
பிணை பெறுவதற்காகவே கெஜ்ரிவால் சிறையில் இனிப்பு சாப்பிடுகிறாராம்!
புதுடில்லி, ஏப்.20- டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் காணொலி மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிபிஅய் மற்றும் அமலாக்கத் துறை (ஈ.டி.) வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் 18.4.2024 அன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஈ.டி. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “அர்விந்த் கேஜ்ரிவால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்படி இருந்தும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை அவர் உட்கொள்கிறார்.
அவர் நாள்தோறும் ஆலு பூரி, மாம்பழம், இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்கிறார். மருத்துவ அறிக்கையை காரணம் காட்டி பிணை பெறுவதற்காக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்” என்றனர்.
உணவு அட்டவணை
இதையடுத்து நீதிபதி கூறும்போது, “இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், கெஜ்ரிவாலின் உணவு அட்டவணையும் இடம்பெற வேண்டும்” என உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *