நல்லதொரு சாதனை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளில் 24,000 இதய இடையீட்டு சிகிச்சை!

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 20- ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை (கேத் லேப்) ஆய்வகத்தில் 24 ஆயிரம் சிகிச்சை கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் மிக நுட்பமான சிகிச்சை கள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள் ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையின் இயக் குநர் மருத்துவர் விமலா மற்றும் தொடர்பு அதிகாரி மருத்துவர் ஆனந்த்குமார் ஆகியோர் கூறிய தாவது:
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தற்போது இதய வியல், புற்றுநோயியல், நரம்பியல் உள்பட 10 உயர் சிறப்பு சிகிச்சைத் துறைகளும், 6 சிறப்பு சிகிச்சைத் துறைகளும் உள்ளன.

அதில், இதய இடையீட்டு சிகிச் சைப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 24 ஆயிரம் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணரும், பேராசிரியருமான டாக்டர் செசிலி மேரி மெஜல்லா மற்றும் துறைத் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் இதனை சாத்தியமாக்கி யுள்ளனர். அறுவை சிகிச்சையின்றி கால் அல்லது கை பகுதியில் சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வழியாக இதய பாதிப்புகளை அவர்கள் சரி செய்துள்ளனர்.
சீரற்ற இதயத் துடிப்பு உள்ளவர் களுக்கும், குறிப்பாக இதயத் துடிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும் எலக்ட்ரிக் பிசியாலஜி ஸ்டடி மற்றும் அப்ளேசன் எனப்படும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்பட்டன. மொத்தம் 214 பேருக்கு அத்தகைய சிகிச்சைகள் வாயிலாக இதயத் துடிப்பு சீராக்கப் பட்டது.
மகா தமனி வால்வு மாற்ற சிகிச் சைகளானது மூன்று பேருக்கு ரத்த நாளங்களின் வழியாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயக் குழாயில் உள்ள துவாரங் களை அறுவை சிகிச்சையின்றி அடைக்கும் ‘ஏஎஸ்டி’ எனப்படும் சிகிச்சை 231 பேருக்கு அளிக்கப் பட்டது. இதில், அதிகளவில் இளம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
அதேபோன்று, இதயத்தின் மிட் ரல் வால்வு சுருக்கத்தை விரிவடையச் செய்யும் ‘பிடிஎம்சி’ சிகிச்சை மூலம் 413 பேர் பலனடைந்துள்ளனர்.

முக்கியமாக மகாதமனி கிழிசலை சரிசெய்யும் ‘ஆர்எஸ்ஓவி’ என்ற சிகிச்சையானது 7 பேருக்கு மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. 73 வயதான விவசாயி ஒருவருக்கு அந்த சிகிச்சை மூலம் ‘ஏடிஓ’ என்ற உபகரணம் பொருத்தப்பட்டு அப்பிரச்சினை சரி செய்யப்பட்டது. இதுபோன்ற சிகிச் சையானது 70 வயதைக் கடந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்படுவது உலகிலேயே இது முதன்முறை. இதைப் பாராட்டி அய்ரோப்பிய சுகாதார இதழ் கட்டுரையும் வெளியிட்டிருந்தது.
இதைத் தவிர பேஸ்மேக்கர் உள்ளிட்ட இதயத் துடிப்பை சீராக்கும் கருவிகளைப் பொருத்தும் சிகிச்சை களையும் மருத்துவர்கள் திறம்பட மேற்கொண்டுள்ளனர். ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு இது ஒரு மைல் கல் சாதனை என்று அவர்கள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *