சோமரசன் பேட்டை, செப். 15- கடந்த 10.9.2023 அன்று மாலை 5.00 மணி அளவில் தீரன் நகரில் ஒன்றிய கழக செயலாளர் சி. திருஞானசம்பந்தம் இல்லத்தில், ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தகயான் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தோழர்கள் உரைக்குப் பிறகு மு.நற்குணம் அறிஞர் அண்ணா தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஏன் கொண்டாட வேண்டும் என் பது பற்றியும், விடுதலை சந்தா சேர்ப்பது பற்றியும், கழக செயல பாடுகள் பற்றியும், தெருமுனை கூட்டங் கள் நடத்துவதுபற்றியும் உரை நிகழ்த்தினார். கூட்ட முடி வில் தோழர் கபிலன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்:
மு.நற்குணம், காப்பாளர், சா.செபஸ்தியான், ஒன்றிய தி.க. தலைவர். சி.திருஞாணசம்பந்தம், ஒன்றிய செயலாளர், பி.தியாகரா சன், பெரியார் பெருந்தொண்டர், ப.கபிலன், தீரன்நகர், சு.ராஜசேகர், அல்லித்துறை, மு.புண்ணிய மூர்த்தி, செங்கற்சோலை, தி.அஞ்சலை, தீரன் நகர்
வரும் 17.9.2023 தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண் டாடுவது என்றும், சோமரசன் பேட்டை பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ சிலை வைக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது என்றும், சோமரசன் பேட்டை பகுதியில் கல்விக் கண் திறந்த கு.காமராசர் முழுஉருவ சிலை வைக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது என்றும், மணிகண்டம் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத் தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோ ரின் பிறந்தநாள் தெருமுனை பிரச் சார கூட்டங்கள் நடத்துவது என் றும் கலந்துரையாடலில் தீர்மானிக் கப்பட்டது.