திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவில் மாதந்தோறும் ஒரு வண்ண தினம் கொண்டடப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் பழுப்பு நிற நாள் (ப்ரௌன்) 08.9.2023 அன்று கொண்டாடப்பட்டது.அன்றைய நாள் பார்க்கும் இடத்திலெல்லாம் பழுப்பு நிறம் என்று கூறும் வண்ணம், மழலையர் பிரிவில் பயிலும் 109 மாணவ-மாணவிகளும் மற்றும் பள்ளியின் ஆசிரியர்களும் பழுப்பு நிற ஆடையில் பள்ளிக்கு வருகை தந்திருந்தது காண்போரைக் கவரும் வண்ணம் இருந்தது. அன்றைய நாள் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.