பெங்களூரு, ஏப்.19- கருநாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் அர்ஜுனகி கிரா மத்தின் அருகே 13.4.2024 அன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியும், அந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்தவிபத்தில் கார் அப்பளம் போல சுக்குநூறாக நொறுங்கிப் போனது. லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இதில், காரில் இருந்த சிறுவன் உள்பட 4 பேர் நிகழ்வு இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். காவல்துறையினர் விசாரணை யில், பலியானவர்கள் விஜயாப்புரா டவுனைச் சேர்ந்த ரவிநாத் சுனில் லால் பட்டாரா (வயது 52), புஷ்பா ரவிநாத் பட்டாரா (40), அர்ஜுன குஷால் சிங் ராஜ்புத் (32). மேகராஜா ராஜ்புத் (12) என்பது தெரியவந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர் கள் 7 பேரும் காரில் ஜம கண்டியில் உள்ள கோவிலுக்குசென்ற போது இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
இதுவும் பகவான் செயலோ! கருநாடகத்தில் கோவிலுக்குச் சென்ற 4 பேர் லாரி மோதி மரணம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books