பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்,
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பங்கேற்பு
அரியலூர், ஏப். 17- அரியலூர் மாவட்ட கழக செயலாளர் மு. கோபாலகிருஷ்ணனின் கோபால் உணவகத்திறப்பு விழா அரியலூரில் சிறப்பாக நடைபெற்றது.
15.4.2024 அன்று காலை 9 மணியளவில் தொடங்கிய இந் நிகழ்ச்சிக்கு பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையேற்க, மாவட்டத் தலை வர் விடுதலை நீலமேகன் வர வேற்புரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, காப்பாளர் சு.மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், தொழிலதிபர் ராஜா. அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“தந்தை பெரியார் வாழ்க!” என்ற ஒலிமுழக்கத்துடன் உணவகத்தை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்து வாழ்த்துரை வழங் கினர்.
பெரியார் தொண்டர்கள் எந்த பணியை செய்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள், ஈடுபாட்டு டன் செய்யக்கூடியவர்கள். இந்த உணவகத்தை நடத்துவதற்காக பல ஊர்களில் இருக்கக்கூடிய சுவை யான உணவகங்களுக்குச் சென்று ஆலோசனை பெற்றுத் துவங்கியிருக்கிறார் கோபால்.
அவரது முயற்சி வெற்றியை தரும். துடிப் போடு சிறப்பாக செயல்படக்கூடிய அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மக்களாலும், முதலமைச்சராலும் பாராட்டக்கூடியவராகத் திகழ் கிறார். கடுமையான தேர்தல் நேரத் திலும் நேரத்தை ஒதுக்கி இங்கே பங்கேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று பொதுச் செயலாளரும், கடு மையான உழைப்பாளியான கோபால் இந்த புதிய முயற்சியினை துவங்கி இருக்கிறார். தன்னை மட்டுமே நம்பக்கூடியவர்கள் பெரியாரின் தொண்டர்கள். அந்த வகையிலே கோபாலும், அவரது குடும்பத்தின ரும் கடுமையான உழைப்பை நல்கி இந்த தொழிலிலும் மேம்பட வாழ்த்துகிறேன். என்று அமைச்சர் சிவசங்கரும் வாழ்த்துரை வழங் கினார்கள்.
அரியலூர் சட்டமன்ற உறுப் பினர் கு.சின்னப்பா வருகை புரிந்து வாழ்த்து கூறினார். மு.கோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
மாவட்ட இணைச்செயலாளர் ரத்தின ராமச்சந்திரன் மாவட்ட விவசாய அணித் தலைவர் மா.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் அரியலூர் ந.செல்லமுத்து, அரிய லூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, வெங்கடகிருஷ்ணா புரம் மருதமுத்து, செந்துறை ஒன் றிய செயலாளர் ராசா. செல்வ குமார், குழுமூர் சுப்பராயன், தா பழூர்ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம்,அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க.மணி கண்டன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கி.கமலக்கண்ணன், உள்ளிட்ட ஏராளமான பொறுப் பாளர்களும், உறவினர்களும், நண் பர்களும் பங்கேற்றனர்.