‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!)

Viduthalai
13 Min Read

மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின்
10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத ‘கியாரண்டீ’கள்
வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்

‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!) என்பது பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு தனி அமைப்பு. எந்த அரசியல் கட்சிகளுடன் அதற்கு தொடர் பும் இல்லை. பல்வேறு சமூகத்தினர் அதன் உறுப்பினர் களாக உள்ளனர். பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். பா.ஜ.க. ஆட்சி 2024 மக்களவைத் தேர்தலில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே இந்த மக்கள் இயக்கத்தின் நோக்கம். பா.ஜ.க. அரசு அளித்த பொய்யான வாக்குறுதிகளையும், இதுவரை செய்துள்ள மிகப்பெரிய நம்பிக்கை துரோகங்களையும் விரிவாகத் தொகுத்து அவர்கள் ஒரு சிறு நூலை வெளியிட்டுள்ளனர் – ‘The Gruesome Betrayal’ (கடுந்துரோகம்) என்ற தலைப்பில், பல்வேறு சமூகச் சீர்திருத்த அமைப்புகளுடன் இணைந்து இதை வெளியிட்டுள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மக்களுக்கு இழைத்துள்ள துரோகங்கள் மிகவும் கொடுமையான 10 நம்பிக்கைத் துரோகங்கள், வஞ்சனைகள் இதில் வரிசை யாக விளக்கப்பட்டுள்ளது.

துரோகம் – 1
விலைவாசி உயர்வு
(ஒவ்வொரு நாளும் நடந்து வரும் கொள்ளை)
பா.ஜ.க. அரசு விலைவாசிகளைக் கட்டுப்படுத்தாதது முதல் நம்பிக்கை துரோகமாக நூலில் விளக்கப்பட்டுள்ளது. ‘ஒன்றிய அரசே தினந்தோறும் அடித்து வந்த கொள்ளை’ என்ற தலைப்புடன் இந்த முதல் அத்தியாயம் துவங்குகிறது.

அளித்த வாக்குறுதி என்ன?
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் பணமுதலைகள் வைத்துள்ள கருப்புப் பணம் பறிமுதல் செய்து கொண்டு வரப்படும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக் கப்படும். பெட்ரோல் விலை குறைக்கப்படும். சமையல் எரி வாயு உருளைகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும். இவையெல்லாம் அர்கள் அளித்த வாக்குறுதிகள்.

உண்மையில் நடப்பது என்ன?
கடந்த பத்து ஆண்டுக்கால பா.ஜ.க. ஆட்சியில் எல்லாப் பொருட்களின் விலையும் இருமடங்காகவோ, அதைவிட அதிகமாகவோ அதிகரித்து வந்துள்ளன. கீழ்க்கண்டவற்றை ஓர் உதாரணத்திற்காகப் பார்ப்போம்:
வீட்டு உபயோகப் பொருட்கள் 2014 இல் 2024 இல்
வாயு உருளை (கேஸ் சிலிண்டர்) ரூ. 410/- ரூ. 906/-*
டீசல் ரூ. 62/- ரூ. 93/-
பெட்ரோல் ரூ. 72/- ரூ. 106/-
சூரியகாந்தி எண்ணெய் ரூ. 80/- ரூ. 160/-
கோதுமை மாவு ரூ. 35/- ரூ. 60/-
துவரம் பருப்பு ரூ. 75/- ரூ. 150/-
* ரூ.1,200/-யையும் தாண்டியது. பொதுத் தேர்தல் நெருங்கி வந்ததால் சிறிதளவு குறைக்கப்பட்டது.
மேற்கண்ட பட்டியல் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே ஆகும். ஓட்டல் அறைகளின் வாடகை, பேருந்து, ரயில் கட்டணங்கள், காய்கறிகளின் விலை, மாமிசம், மீன், ஆடைகள், காலணிகள் சிமெண்ட், இரும்பு, பள்ளிக் கல்விக் கட்டணம், மருத்துவமனை கட்டணங்கள் – இவை எல்லாமே வானுயரம் அதிகரித்து உச்சத்தைத் தொட்டு விட்டன. மேற்கண்டவற்றின் விலைகள் சாமானிய மக் களின் வாழ்வை அவல நிலைக்குக் கொண்டு வந்து விட்டன. ஒவ்வொரு அம்சத்திலும் மக்கள் கொள்ளையடிக் கப்பட்டு வருகிறார்கள். வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் இது.

இதற்கு காரணங்கள் என்ன?
விலைவாசி உயர்வுக்கு பா.ஜ.க. அளிக்கும் உண்மைக் குப் புறம்பான மூன்று காரணங்கள்; பச்சைப் பொய்கள்:
1) பன்னாட்டு வர்த்தகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றத்தால் இந்த பெட்ரோல் விலை உயர்வைத் தவிர்க்க இயலவில்லை.
2) எண்ணெய் கொள்முதலில் காங்கிரஸ் ஆட்சியில் பட்டிருந்த கடன்களை பா.ஜ.க. அரசு அடைத்ததால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
3) கரோனா காலத்தில் இலவச தடுப்பூசிகள் – பிரதம அமைச்சரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ் இலவச அரிசி விநியோகம் – இவற்றால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
இனி விலைவாசி உயர்வுக்கான உண்மையான காரணங்களைப் பார்ப்போம்:
கச்சா எண்ணெய் விலை பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்தது என்பதே முதல் பொய். உண்மை அதற்கு நேர்மாறாகவே உள்ளது.
1) 2014 இல் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 110 டாலர்களாக இருந்தது. 2023 இல் அது 76 டாலர்களாக குறைந்தது.
2) பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மானிய உதவிக் குறைப்பு, எல்லா நுகர்பொருட்கள் மீதும் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி – இவையெல்லாம் தான் விலைவாசி உயர்வுகளுக்கு முக்கியமான காரணங்கள்.
3) பெட்ரோல் மீதான வரி இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. (லிட்டருக்கு 9.48 சதவிகிதம் முதல் 19.98 சதவிகிதம் வரை).
4) டீசல் மீதான வரி அய்ந்து மடங்காக உயர்ந்துள்ளது (லிட்டர் ஒன்றுக்கு 3.56 சதவிகிதம் முதல் 15.58 சதவிகிதம் வரை).
5) சமையல் எரி வாயு உருளை (கேஸ் சிலிண்டர்கள்) மீதான மானியத் தொகை ரத்து. (சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.500).
6) எல்லாப் பொருட்கள் மீதும் 12 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி. ஏழைக் குடும்பங்களுக்கு அடிப்படைத் தேவைகளாக உள்ள உப்பு, அரிசி, கோதுமை, அவசியமான மருந்துகள் ஆகியவை மீது தற்போது 12 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்வந்தர்கள் வாங்கும் சொகுசுக் கார்களுக்கு 4 சதவிகித ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்படுகிறது. வைர நகைகளுக்கு 1.5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி மட்டும் தான். ஒன்றிய அரசு யார் பக்கம் சாதகமாக உள்ளதென்று மக்களே புரிந்து கொள்ள வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமின்றி, விநி யோகம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் உயர்ந்து விட்டன. கட்டண உயர்வால் எல்லா பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டன. மேலும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது வரி விதிக்காமல், நுகர்வோர் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இவற்றின் விளை வாகவே எல்லாப் பொருட்களின் விலையும் உச்சத்தைத் தொட்டுவிட்டது.
அரசு வசம் இருப்பில் இருந்த பணம் எங்கே, எப்படி மாயமாயிற்று என்பதைப் பார்ப்போம்:
1) பெட்ரோல் மீதான வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு கிடைத்த கூடுதல் வருவாய் ரூபாய் 26.74 லட்சம் கோடி.
2) மக்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி வாயிலாக ஒன்றிய அரசுக்கு கிடைத்த கூடுதல் வருவாய் வருமானம் ரூபாய் 31.25 லட்சம் கோடி.
3) இவ்விரண்டையும் இணைத்துப் பார்த்தால் அரசுக்கு கிடைத்த கூடுதல் வரி வருவாய் ரூபாய் 58 லட்சம் கோடி என்பது தெளிவாகிறது.
4) கரோனா காலத்தில் இலவச தடுப்பூசிகள் இரண்டு முறை போடப்பட்டதற்கான மதிப்பு ரூபாய் 36,500 கோடி.
தடுப்பூசிகளும் முற்றிலும் இலவசமாகப் போடப்பட வில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு ஊசி இலவசமாகப் போடப்பட்டது. தடுப்பூசியை ரூ.600 முதல் ரூ.700 வரையிலான விலைக்கு மக்களுக்குப் போட செரம் இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. உண்மையில் அந்த தடுப்பூசி மருந்தின் விலை ரூபாய் 150/-க்கு மேல் இல்லை என்பதே உண்மை. இந்த செரம் நிறுவனத்தின் உரிமையாளர் இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளார். உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் இந்த நபரும் இடம் பெற்றுள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்த நிறுவனம் பா.ஜ.க.வுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.
5) மோடி அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (Garib Kalyan Anna Yojana) என்ற திட்டத்திற்காக 4.6 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
6) பன்னாட்டு பெட்ரோலியப் பத்திரக் கடன்களை அடைக்க இந்த மோடி அரசு செலவழித்துள்ள தொகை ரூபாய் 1.03 லட்சம் கோடி. காங்கிரஸ் ஆட்சியில் வாங்கியிருந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை அடைக்க பா.ஜ.க. அரசு மக்களிடமிருந்து ரூபாய் 58 லட்சம் கோடி கொள்ளையடித்திருப்பது நியாயமா?
இப்போது நாம் பா.ஜ.க. அரசுக்கு கிடைத்த மொத்த வருமானத்தையும், அது செய்துள்ளதாகக் குறிப்பிடும் மொத்தச் செலவையும் கூட்டிப் பார்ப்போமா?
செலவுகள்:
1) பெட்ரோலியப் பத்திரங்கள் – ரூ.1.03 லட்சம் கோடி
2) இலவச தடுப்பூசிகள் – ரூ. 36,500 கோடி
3) கரீப் ஆஹார் யோஜனா – ரூ. 4.6 லட்சம் கோடி
(Garib Ahaar Yojana)
மொத்த செலவு – ரூபாய் 6 லட்சம் கோடி
வருமானம்:
பெட்ரோல், டீசல் மீதான செஸ் (CESS) மற்றும் ஜி.எஸ்.டி. (GST) வரிகள் மூலம் – ரூபாய் 58 லட்சம் கோடி
எனவே 58 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தில் 6 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே செலவு என்றாகிறது. மீதி 56 லட்சம் கோடி ரூபாய் மக்களிடமிருந்து கொள்ளையடிக் கப்பட்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
மொத்த வரவு – ரூபாய் 58 லட்சம் கோடி
மொத்த செலவு – ரூபாய் 6 லட்சம் கோடி
செலவுக்கு அதிகமாக மக்களிடமிருந்து – ரூபாய் 52 லட்சம் கோடி
வரிவசூல் செய்தது
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. மக்களிட மிருந்து ரூ.52 லட்சம் கோடியை களவாடி சூறையாடியிருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழில்: எம்.ஆர்.மனோகர்

– – – – –

துரோகம் – 2
விவசாயிகள் மீதான நெருக்கடி
(கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக விவசாயிகள் பலியிடப்படுகிறார்கள்)
என்ன வாக்கு உறுதியளித்தார்கள்?
* எம்.எஸ். சுவாமிநாதன் ஆணைய அறிக்கையில் பரிந்துரைத்தபடி, விவசாய விளைப் பொருள்களுக்கு, உற்பத்திச் செலவைப் போல குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அளவில் விலை நிர்ணயம் செய்து வழங்குவோம்.
* விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக்கிடுவோம்.
* விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்வோம். ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாத கடனை வழங்குவோம்.
இறுதியாக செய்தது என்ன?
* அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை; அதற்கு மாறாக,
* ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஆறு மாதத்திற்குள் “எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை” என மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
* ஒன்றிய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 30 விழுக்காடு குறைக்கப்பட்டது.
* விவசாயத்திற்கான மானியங்கள் ஒன்றிய அரசால் குறைக்கப்பட்டதால், விவசாயத்திற்கான விதை, உரம், பூச்சி மருந்து, பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் இதர இடு பொருள்களின் விலைகள் உயர்ந்துவிட்டன; அதிகமாக ஏறி விட்டன.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட ரூ.2.72 லட்சம் கோடி தேவைப்படும் நிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது யானைப்பசிக்கு அளிக்கப்பட்ட சோளப்பொரி போன்றது.
* விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. நாட்டில் விவசாயிகள் அனைவரும் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்திட ரூ.5 லட்சம் கோடி மட்டுமே தேவைப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையால் அந்தத் தொகையை ஒதுக்கீடு செய்யமுடியாது என ஒன்றிய அரசு கைவிரித்து விட்டது. ஆனால் ஒரு பக்கம் நிதிப் பற்றாக்குறை எனத் தெரிவித்துவிட்டு கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் வாங்கிய கடன்களை ரூ.30 லட்சம் கோடி அளவிற்கு பா.ஜ.க. அரசு தள்ளுபடி செய்துள்ளது.
* விவசாயக் குடும்பங்களின் கடன் சுமை 30 விழுக்காடு அதிகமாகியுள்ளது. மீண்டுவர முடியாத கொடுங்கடன் சுழற்சியில் விவசாயிகள் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.
* ‘தேசியப் பேரிடர் நிவாரண நிதி’ என்பதை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. வெள்ளத்தால், வறட்சியால் இன்ன பிற பேரிடர்களால் வீணடிக்கப்பட்ட விவசாயப் பயிர்களை சாகுபடி செய்தவர்களுக்கு, உதவி கள் எதுவும் அந்த நிதியிலிருந்து வழங்கப்படவில்லை. மாறாக அந்த விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை நோக்கி விரட்டப்படுகிறார்கள். பயிர் காப்பீட்டு திட்டம் முழுமையும் தனியார் கம்பெனிகள் வசத்தில் உள்ளது. விவசாயிகளை அதிகப்படியான சுரண்டலுக்கு ஆளாக் கிடும் போக்காகவே இது உள்ளது.
* கடந்த பத்தாண்டு புள்ளி விபரப்படி 1,74,000 விவ சாயிகள் தற்கொலை செய்து மடிந்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் சராசரியாக வாழ்க்கையில் துயரங்களைத் தாங்க முடியாமல் 30 விவசாயிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
* விவசாய விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், கிராமங்களில் வேலையின்மையாலும், பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்திட உரிய வழிவகைகள் இல்லாததாலும், கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி செல்கின்றனர்.
* விவசாயிகளின் புலம் பெயர்வு அதிகமாகி யுள்ளது. 2016 முதல் 2023 முடிய உள்ள ஆறாண்டுகளில் 4 கோடி மக்கள் இவ்வாறு நகரத்தை நோக்கி புலம் பெயர்ந்துள்ளனர்.
* தீங்கு விளைவிக்கக் கூடியவகையில் சட்டத்தில் திருத்தங்களின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட விவசாய விளைபொருள் விற்பனை குழுக்களை மூடிடும் வழிகளை தொடர்ந்து பா.ஜ.க. ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.
* நில உடமைச் சட்டத் திருத்தங்களின் மூலம் விவசாய விளைநிலங்களை கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் கையகப் படுத்திடும் வாய்ப்புகளை பா.ஜ.க. ஒன்றிய அரசு அதிகப்படுத்தி வருகிறது.
* நிலங்களை கையகப்படுத்திடும் சட்டத் திருத்தங் களின் மூலம் விவசாயிகளின் நிலங்களை பெரும் கார்ப் பரேட் நிறுவனங்கள் குத்தகைக்கு வளைத்துப்போடும் வாய்ப்புகள் பெருகியுள்ளன.
* விவசாயிகளின் மீது ஒன்றிய அரசு காட்டிய கடுமையான விரோதத் தன்மை போக்கிலும், உண்மை யான வலுவான கடந்த பல்லாண்டுகளாக நிலவிவரும் இன்னல்களை எதிர்த்து டெல்லி மாநகரில் விவசாயிகள் தெருக்களில் போராடி வந்தனர்.

இந்தப் போராட்டத்தின் துயரமாக போராடி வந்த பெண் விவசாயிகளையும் சேர்த்து மொத்தம் 752 விவசாயிகள் தங்களது உயிரை இழக்க நேரிட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற ஊரில் நடைபெற்ற அமைதியான விவசாயிகளின் போராட்டத்தில் எட்டு விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்குக் காரணம் – பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனியின் மகன் வேண்டுமென்றே போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மோட்டார் வண்டியை ஓட்டியதால் உயிரிழப்பு ஏற்பட்டது. இப்படி மரணம் விளைவிக்கப்பட்ட சூழலிலும் அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வில்லை; எந்தவித கடுமையான குற்ற நடவடிக்கைக்கும் ஆளாக்கப்படவில்லை. தந்திரமான, முறைதவறிய வழி களைக் அரசானது கையாண்டு போராடி வந்த விவசாயி களை அச்சுறுத்தி, கலைக்க முற்பட்டபொழுதும் விவசாயிகளின் போராட்டம் வலுவிழந்துவிடவில்லை.

அந்த நேரத்தில் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபொழுது பிரதமர் மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றினார்; விவசாயிகளிட மிருந்து மன்னிப்புக் கோருவதாகவும், கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக வும், மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாகவும் தொலைக்காட்சி மூலம் வாக்குறுதி அளித்தார். ஒன்றிய அரசிடமிருந்து பயன்படுத்திடும் பண்ணைக் கருவிகள் மீது கட்டுப்பாடு வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது கவனம் விவசாயிகள் எழுத்துப் பூர்வ உறுதிமொழி அளிக்கப்பட்ட நிலையில் விவசாயி கள், போராட்டத்தை நிறுத்தி விட்டு வீடு திரும்பினர். ஆனால், அதற்குப் பின் ஓராண்டு கடந்துவிட்ட நிலை யிலும், தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அடையாளம் கூடமோடி அரசிடமிருந்து தெரியவில்லை. இந்திய விவசாயிகளுக்கு மோடி அரசு பெரும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது.

இதற்கான காரணங்கள் என்ன?
காரணங்கள் தெளிவாக இருக்கின்றன. ஒன்றிய அர சானது விவசாயிகளை அவர்கள் சாகுபடி செய்துவரும் விளை நிலங்களிடமிருந்து விரட்டியடிக்க முடிவு செய்து விட்டது. விவசாயிகளின் நிலங்கள் மீது கட்டுப்பாட்டை கொண்டு வந்து அவற்றை பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு தாரை வார்த்திட முடிவு செய்தது.
அதானியும், அம்பானியும் விவசாயத் துறையில் கணிசமான அளவில் முதலீட்டை ஏற்கெனவே செய்திருந்தனர். விவசாயப் பயிர்களை விளைவிக்கத் தேவைப்படும் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், டிராக்டர் மற்றும் உழவுக் கருவிகள், விவசாயிகள் பயன்படுத்திடும் பண்ணைக் கருவிகள் மீது கட்டுப்பாடு வைத்திருந்தனர்.

இப்பொழுது அவர்களது கவனம் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் விளைச்சல் நிலங்கள் மீதும், பயிர்கள் மீதும் பாய்ந்தது. அதற்காகத்தான், விவ சாய விளைபொருள் விற்பனைக் குழுச் சட்டம், விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டம்; நிலங்களை குத்தகைப்படுத்திடும் சட்டப் பிரிவுகளில் திருத்தங்களைக் கொண்டு வர மோடியின் ஒன்றிய அரசு முனைந்தது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலைப்பாடானது – விவ சாயிகளின் விளைநிலங்களை கைப்பற்றிடவோ அல்லது சாகுபடியாகும். முக்கிய விவசாயப் விளைபொருள்களைக் கட்டுப்படுத்திடவோ – அந்த விளைபொருள்களை நிறுவ னங்களுக்கு – ஆலைகளின் நிபந்தனைகளை ஏற்று விற் கும் நிலைமையினை உருவாக்குவதாகவோ இருந்தது.

விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய ஒன்றிய அரசானது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதற்கு ஆதரவு அளித்தது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நடவடிக் கைகளுடன் ஒத்துப் போகும் வகையில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு இணங்கியது. அதற்கு ஏற்ற வகையில் விவசாய சட்டங் களை இயற்றிடும் முயற்சிகளில் ஒன்றிய அரசு இறங்கியது. சட்டங்களை இயற்றவும் செய்தது.
தங்களுடைய வாழ்வினையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிட நாடு தழுவிய அளவில் விவசாயிகள் அமைப்புகளானவை ‘வாழ்வா? சாவா?’ போராட்டத்தில் இணைந்துள்ளன. மோடி அரசானது விவசாயிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களது போராட்டத்தை அடக்கிட முயற்சி செய்து வருகிறது. இந்தப் போராட்டம் வெற்றி பெற்றால் தான், விவசாயச் சமுதாயம் நிலைத்து வாழும். இல்லை யென்றால் நிலத்தில் சாகுபடி செய்துவரும் விவசாயிகள் சமுதாயத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விடப்பட்ட கூலித் தொழிலாளியாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

– தமிழில் வீ.குமரேசன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *