காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன ? ராகுல் காந்தி மக்களுக்கு அழைப்பு

1 Min Read

புதுடில்லி,ஏப்.8- 18-ஆவது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக் கையை காங்கிரஸ் கட்சி கடந்த 5.4.2024 அன்று வெளியிட்டது. நீட் தேர்வு கட்டாயம் இல்லை, ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது:- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளது, உங்கள் எண்ணங்களை சமூக ஊடகங்களில் பகிரவும் இது ஒரு புரட்சிகரமான அறிக்கை என்று பலர் என்னிடம் கூறினர். தேர்தல் அறிக்கையை வடிவமைக்க ஆலோசனைகளை வழங்கிய மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தேர்தல் அறிக்கை குறித்த உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது, என்ன செய்யவில்லை என்பதை கூறுங்கள்.
-இவ்வாறு அந்த காட்சிப் பதிவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *