பிஜேபியை எதிர்ப்பதால் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல்

Viduthalai
1 Min Read

அரசியல்

பெங்களுரு, செப்.22   நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் தவிர தெலுங்கு, கன் னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்க ளில்  நடித்து வரு கிறார். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

 சமீபத்தில் கருநாடகா மாநிலம் கலபுர்கியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசும் போது, ஸநாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள அசோக் நகர் காவல்நிலையத்தில்   நடிகர் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘ஸநாதன தர்மம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் யூ-டியூபில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *