பெரியார் விடுக்கும் வினா! (1282)

1 Min Read

நல்ல வீடு, வாசல், வசதி இல்லாதவர்கள், படிப்பு, வைத்திய வசதி இல்லாதவர்கள், சோற்றுக்குத் துணிமணிக்கு வசதி இல்லாதவர்கள் எல்லாம் யார்? நம்மவர்கள்தானே! போலீசுகாரர்களை வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்துங் கள். அவன் சட்டையெல்லாம் கழற்றிப் பாருங்கள். அதில் எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு இருப்பானோ? அதில் எவனாவது பார்ப்பான் இருப்பானோ? கக்கூசு எடுப்பவனில் எவனாவது பார்ப்பான் இருப்பானா? விவசாயம் செய்பவனில் எவனாவது பார்ப்பான் என்று இருப்பானா? நெசவு வேலை செய்பவனில் லட்சம் பேர்களைப் பார்த்தாலும் இதேதானே நிலை? இதற்கெல்லாம் நாம் கீழ் ஜாதி என்பதன்றி வேறொரு காரணம் உண்டா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *