இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை புதிய அறிக்கை கூறும் அதிர்ச்சிச் செய்தி 

viduthalai
6 Min Read

இந்தியாவில் வேலை வாய்ப்பு நிலை: இளைஞர்கள் மற்றும் பெண்கள், கவலைகள் மற்றும் எச்சரிக்கையைப் பற்றி ஒரு புதிய அறிக்கை என்ன சொல்கிறது?
2000-2019 வரை நீண்ட காலச் சரிவுக்குப் பிறகு சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், ஊழியர்கள் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலையின்மை விகிதம் போன்ற தொழிலாளர் சந்தை குறிகாட்டிகளில் “முரண்பாடான முன்னேற்றங்கள்” உள்ளன.

மனித மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (மிலிளி) சமீபத்தில் வெளியிட்ட இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024, கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் பொருளாதார நெருக்கடி குறியீடு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பை அப்பட்டமாக எடுத்துக்கூறுகிறது

பெரிய அம்சம்

மோசமான வேலை நிலைமைகள் பற்றிய கவலைகளை அறிக்கை கோடிட்டுள்ளது: வேளாண்மை அல்லாத வேலைக்கான மெதுவான மாற்றம் தலைகீழாக மாறிவிட்டது; சுயதொழில் அதிகரிப்பதற்கும், ஊதியம் இல்லாத குடும்பப் பணிகளுக்கும் பெரும்பாலும் பெண்கள் தான் காரணம்; இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வயது வந்தோருக்கான வேலைவாய்ப்பை விட தரம் குறைந்ததாக உள்ளது; ஊதியங்கள் மற்றும் வருவாய்கள் தேக்கமடைகின்றன அல்லது குறைந்து வருகின்றன.
பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குறியீடு, தொழிலாளர் சந்தை விளைவின் ஏழு குறிகாட்டிகளை அடிப் படையாகக் கொண்டது: (வீ) வழக்கமான முறையான வேலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சதவீதம்; (வீவீ) சாதாரண தொழிலாளர்களின் சதவீதம்; (வீவீவீ) வறுமைக் கோட்டிற்குக் கீழே சுயதொழில் செய்யும் தொழிலாளர்களின் சதவீதம்; (வீஸ்) வேலை பங்கேற்பு விகிதம்; (ஸ்) சாதாரண தொழிலாளர்களின் சராசரி மாத வருமானம்; (ஸ்வீ) இரண்டாம் நிலை மற்றும் அதற்கு மேல் படித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம்; (ஸ்வீவீ) வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அல்லது பயிற்சியில் இல்லாத இளைஞர்கள்.

வேலைவாய்ப்பு தரம்

முறைசாரா வேலைவாய்ப்பு அதாவது கூலி – மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முறை அதிகரித்துள்ளது,. சுயதொழில் மற்றும் ஊதியம் இல்லாத குடும்ப வேலையும் அதாவது அடிமை போன்றமுறைகள் அதிகரித்துள்ளது, குறிப்பாக பெண்கள் உணவிற்காக மட்டும் வேலை செய்வது அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 90% பேர் முறைசாரா வேலையில் உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

சுய வேலைவாய்ப்பு முதன்மையான வேலைவாய்ப்பாக உள்ளது. இது 2022 இல் 55.8%. சாதாரண மற்றும் வழக்கமான வேலைவாய்ப்பு முறையே 22.7% மற்றும் 21.5% ஆகும்.
2000 மற்றும் 2019க்கு இடையில் சுய வேலைவாய்ப்பின் பங்கு கிட்டத்தட்ட 52% நிலையானதாக இருந்தது, அதே நேரத்தில் வழக்கமான வேலைவாய்ப்பு கிட்டத்தட்ட 10 சதவீத புள்ளிகளால் அதிகரித்து, 14.2%இலிருந்து 23.8%ஆக இருந்தது. இது 2022இல் தலைகீழாக மாறியது, சுய வேலைவாய்ப்பு 55.8% ஆக அதிகரித்து, வழக்கமான வேலைவாய்ப்பின் பங்கு 21.5% ஆக குறைந்தது. 2000ஆம் ஆண்டில் 33.3%ஆக இருந்த சாதாரண வேலை வாய்ப்பு 2022 இல் 22.7% ஆகக் குறைந்தது.
வழக்கமான வேலைவாய்ப்பு என்பது பொதுவாக சிறந்த தரமான வேலைகளை வழங்குவதாகக் கருதப்படுகிறது, அதே சமயம் சாதாரண வேலை அதன் ஒழுங் கற்ற தன்மை மற்றும் குறைந்த தினசரி வருவாய் காரணமாக ஒப்பீட்டளவில் மோசமான தரமான வேலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பங்கேற்பு

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (லிதிறிஸி) உலக அளவில் மிகக் குறைந்த அளவில் உள்ளது. 2000 மற்றும் 2019க்கு இடையில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 14.4 சதவீத புள்ளிகள் (ஆண்களுக்கான 8.1 சதவீத புள்ளிகளுடன் ஒப்பிடும்போது) குறைந்துள்ளது. அதன்பிறகு இந்த போக்கு தலைகீழாக மாறியது, 2019 முதல் 2022 வரை பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 8.3 சதவீத புள்ளிகள் (ஆண்களுக்கான 1.7 சதவீத புள்ளிகளுடன் ஒப்பிடும்போது) உயர்ந்துள்ளது.
கணிசமான பாலின இடைவெளி உள்ளது. 2022 இல் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (32.8%) ஆண்களை விட (77.2%) 2.3 மடங்கு குறைவாக இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு, பெரும்பாலும் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் காரணமாகும், இது 2022இல் உலக சராசரியான 47.3%அய் விட மிகவும் குறைவாக இருந்தது, ஆனால் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தரவுகளின்படி தெற்காசிய சராசரியான 24.8%அய்விட அதிகமாக இருந்தது.

கட்டமைப்பு மாற்றம்

2018-2019க்குப் பிறகு வேளாண்மை அல்லாத வேலைகளை நோக்கிய மெதுவான மாற்றம் தலைகீழாக மாறியுள்ளது. மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு 2000இல் 60%ஆக இருந்து 2019இல் சுமார் 42%ஆக குறைந்துள்ளது.
இந்த மாற்றம் கட்டுமானம் மற்றும் சேவை துறைகளில் பெருமளவில் உள்வாங்கப்பட்டது, 2000ஆம் ஆண்டில் 23% ஆக இருந்த இந்த துறைகளின் மொத்த வேலைவாய்ப்பு சதவீதம் 2019இல் 32% ஆக அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பில் உற்பத்தியின் பங்கு 12-14% ஆக கிட்டத்தட்ட தேக்க நிலையில் உள்ளது.
2018-2019 முதல், இந்த மெதுவான மாற்றம் விவசாய வேலைவாய்ப்பின் பங்கின் அதிகரிப்புடன் தேக்கமடைந்துள்ளது அல்லது தலைகீழாக மாறியுள்ளது.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு

இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் வேலையின் தரம் கவலைக்குரியதாகவே உள்ளது. குறிப்பாக தகுதிவாய்ந்த இளம் தொழிலாளர்களுக்கு. 2000 மற்றும் 2019க்கு இடையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த வேலை நிலை அதிகரித்தது, ஆனால் தொற்றுநோய்களின் போது குறைந்துள்ளது. இருப்பினும், இளைஞர்களிடையே, குறிப்பாக இரண்டாம் நிலை அல்லது உயர்கல்வி பெற்றவர்களிடையே வேலையின்மை காலப்போக்கில் தீவிரமடைந்துள்ளது.
2022இல், மொத்த வேலையற்ற மக்கள் தொகையில் வேலையற்ற இளைஞர்களின் பங்கு 82.9%ஆக இருந்தது. 2000ஆம் ஆண்டில் 54.2%ஆக இருந்த அனைத்து வேலையற்ற மக்களிடையே படித்த இளைஞர்களின் பங்கு 2022இல் 65.7%ஆக அதிகரித்துள்ளது.

இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 2022இல் படிக்கவோ எழுதவோ தெரியாதவர்களை விட (3.4%) இடை நிலைக் கல்வி அல்லது அதற்கு மேல் (18.4%) முடித்தவர்களுக்கு ஆறு மடங்கு அதிகமாகவும் (29.1%) பட்டதாரிகளுக்கு ஒன்பது மடங்கு அதிகமாகவும் இருந்தது. இது ஆண்களை விட (17.5%) படித்த இளம் பெண்களில் (21.4%), குறிப்பாக பெண் பட்டதாரிகளில் (34.5%), ஆண்களுடன் ஒப்பிடும்போது (26.4%) அதிகமாக இருந்தது.

படித்த இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 2000 இல் 23.9% ஆக இருந்து 2019 இல் 30.8% ஆக உயர்ந்தது, தற்போது இந்த விகிதம் மேலும் அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் (கிமி) எழுச்சி வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், சில பின்-அலுவலக பணிகள் கிமி ஆல் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், இந்தியாவில் அவுட்சோர்சிங் தொழில் சீர்குலைக்கப்படலாம் என்று அறிக்கை கூறியது.
வளர்ந்து வரும் பராமரிப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களில் முதலீடு மற்றும் கட்டுப்பாடுகள் தேவை, இது உற்பத்தி வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக இருக்கலாம். வேலை பாதுகாப்பு இல்லாமை, ஒழுங்கற்ற ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கு நிச்சயமற்ற வேலை நிலை ஆகியவை கிக் அல்லது பிளாட்ஃபார்ம் வேலைகளுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துகின்றன.

உற்பத்தி சார்ந்த விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பை அதிகரிக்க பொருளாதாரக் கொள்கைகள் தேவை, குறிப்பாக உற்பத்தித் துறையில் கொள்கைகள் தேவை, ஏனெனில் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா ஆண்டுதோறும் 7-8 மில்லியன் இளைஞர்களை தொழிலாளர் படையில் சேர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிமி போன்ற கருவிகளை வழங்குவதன் மூலம் மற்றும் உற்பத்திக்கு கிளஸ்டர் அடிப்படையிலான அணுகுமுறையை வழங்குவதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

நாடு முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்று கூறிக்கொண்டு இருக்கும் மோடிக்கு பெண்கள் வெறும் உணவிற்காக மட்டுமே வீடு நிலம் மற்றும் பண்ணை வேலைகளுக்கு செல்வதும் படித்த திறமையான இளைஞர்கள் ஏதோ வேலை கிடைத்தால் போதும் என்று சொற்ப ஊதியத்தில் வேலை செய்வதும் தான் மோடி அரசின் முன்னேற்றம் என்று இந்தப் புள்ளி விபரத்தின் மூலம் வெளிப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *