திண்டுக்கல், மார்ச் 28- பழனியில் நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் 5-4-2024 வெள்ளி மாலை 5 மணிக்கு தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூட்ட முன்னேற்பாட்டிற்காக திண்டுக்கல்லில் 27-3-2024 மாலை 4 மணியளவில் தி.மு.க பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர் கனகராஜ். சி.பி.அய்.எம்., மாவட்ட தி.மு.க. துணை செயலாளர். ஆ.நாகராஜ், தி.மு.க. மாவட்ட மாண வர் கழக அமைப்பாளர் அஸ்வின். பிரபாகரன் ஆகி யோரை தொலைபேசி வாயிலாக பேசி உறுதி செய்யப் பட்டுள்ளது.
இந்நிகழ்வு தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண் டியன், திராவிடர் தொழிலாளர் கழக பேரவைச் செயலாளர். மு.நாகராசன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் வழக்குரை ஞர் மு.ஆனந்த முனிராசன், மாவட்ட செயலாளர் கே.ஆர். காஞ்சித்துரை, நகர செயலாளர் த.கருணாநிதி, பழனி மாவட்ட தலைவர் பொன்.அருண்குமார், மாவட்ட துணைத் தலைவர் இராமகிருஷ்ணன், ஒட்டன் சத்திரம் நகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்த் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தினை சிறப்பாக நடத்துவதாக தி.மு.க. பொறுப்பாளர்கள் உறுதியளித்தனர்.