பொறியியல் மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி!

1 Min Read

 சென்னை, செப். 24 – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க., பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவ – மாணவிகளுக்கிடையே மாநில அளவிலான  மாபெரும் பேச்சுப் போட்டி நடத்தப் படுகிறது. இதில் முதல் பரிசாக ரூ. 5 லட்சம் உட்பட, மொத்தம் ரூ. 60 லட்சம் வரை மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க., பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர்  எஸ்.கே.பி. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் தொழில் துறை மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவரது ஆட்சியில் தொழில் துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது. அதேபோல, தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு தொழில் துறை உச்சத்தைத் தொட் டுள்ளது. குறிப்பாக, பொறியாளர் களின் பங்களிப்புடன் பன்னாட்டு அளவில் தமிழ்நாடு தொழில் துறையில் முன்னிலை வகிக்கிறது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வெகு விமரி சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, தி.மு.க., பொறியாளர் அணி சார்பில் மாபெரும் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், இளங்கலை – முதுகலை  பொறியியல், பாலி டெக்னிக் மற்றும் அய்.டி.அய்., மாணவ – மாணவிகள் பங்கேற்க லாம்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாண வர்கள், தி.மு.க., பொறியாளர் அணி வெளியிட்டுள்ள க்யூ.ஆர். கோடினை  (QR Code) ஸ்கேன் செய்தோ,  அல்லது <https://bit.ly/44GhVjL>  என்ற லிங்க்-அய்க் கிளிக் செய்தோ, [email protected] <mailto:[email protected]> என்ற மின்னஞ்சல் முக வரியின் வாயிலாகவோ,  தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *