தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன மாணவர்கள் குருதிக்கொடை

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

வல்லம், செப். 24 – பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை முன் னிட்டு 145 பல்கலைக்கழக மாண வர்கள் குருதிக்கொடை வழங்கி னர். 

இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் முன்னிலையில் எம்.ஆர்.மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் இராதிகா மைக்கேல் குருதிக் கொடை முகாமை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா.செ.வேலு சாமி, பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா, தஞ்சை மருத்துவக் கல்லூரி இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் கிசோர்குமார், பல் கலைக்கழக மருத்துவ மனையின் மருத்துவர் புஷ்பா, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பல்கலைக் கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டுப் நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கள் ஆகியோர் சிறப்பாக செய் திருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *