ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளை காப்பாற்றிய சிறுவன்

Viduthalai
1 Min Read

அரசியல்

ஹவுரா, செப் 25 – மேற்கு வங்க மாநிலம், மால்டா கிராமத்தில் வசித்து வருபவன் சிறுவன் முர்சலீன். இவன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான்.

அப்போது ​​ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து பெரிய ஓட்டை இருப்பதை கண்டார். தொடர்ந்து சில நாட்க ளாக பெய்து வரும் மழை யால் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அந்த ரயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருப்பதை பார்த்து சிறுவன் அதிர்ந் தான். சிறுவன் முர்சலீன், தான் அணிந்திருந்த சிவப்பு நிற டி-ஷர்ட்டை உடனடியாக கழற்றி ரயிலுக்கு முன்பு காட்டி யபடியே ஓடி வந் தான். சிறுவன் ஓடி வரு வதை பார்த்த ரயில் ஓட்டு நர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தினார். ரயில் ஓட்டுநர் இறங்கி கீழே வந்த போது, சிறு வன் முர்சலீன் அவரிடம் தண்டவாளத்தில் பெரிய பள்ளம் இருப்பதைக் கூறினான். இதனால் அதிர்ச் சியடைந்த ரயில் ஓட்டுநர், பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் முர்சலீனுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இதுகுறித்து அருகில் உள்ள ரயில் நிலையத் திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற் றும் தொழிலாளர்கள் பள்ளத்தை மண் வைத்து நிரப் பினர். அதன்பின் னர் ஒன் றரை மணி நேரம் தாமத மாக ரயில் புறப் பட்டுச் சென்றது. ரயில் பயணிக ளில் பலர் உயிரைக் காப்பாற்றிய சிறுவ னுக்கு பலரும் நன்றிகளை யும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *