மத்திய பிரதேசம்: மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து; 13 பேர் காயம்

viduthalai
1 Min Read

உஜ்ஜைன், மார்ச் 25 மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நக ரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று (25-3-2024) காலை கருவறையில் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. இதற் காக காலையிலேயே மக்கள் அதிக அளவில் திரண்டிருந் தனர். பலர் காத்திருந்தனர்.

அப்போது, பஸ்ம ஆரத்தி நடந்து கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட் டுள்ளது. இதில், கோவில் பூசாரி மற்றும் பணியாளர்கள் என 13 பேர் வரை காய மடைந்தனர். இதில், பஸ்ம ஆரத்தியில் ஈடுபட்டு இருந்த தலைமை பூசாரியான சஞ்சய் குருவும் காயமடைந்து உள் ளார். இதனை தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மீட் கப்பட்டு உஜ்ஜைன் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு செல்லப் பட்டனர். இதுபற்றி விசா ரணை நடந்து வருகிறது என மாவட்ட ஆட்சியர் நீரஜ் குமார் சிங் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *