டி.எம்.எஸ். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திரைத்துறைப் பாடகராக இருந்தவர். பத்மசிறீ, கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். 2010ஆம் ஆண்டில் கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டிற்காக உருவான ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற பாடல்தான் அவர் பாடிய கடைசிப் பாடல். இன்று மார்ச் 24 டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள். சில ஆண்டுகளுக்கு முன்னால் டி.எம்.எஸ். அவர்கள் பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, ’கடவுள் நம்பிக்கை உள்ள எனக்கு இவ்வளவு அருமையான வரவேற்பு கிடைக்கும் என்று எண்ணவில்லை. பெரியார் திடல் பற்றி நான் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்’ என்று கூறினார். ஆசிரியருடன் நீண்ட நேரம் உரையாடி விடைபெற்றார். (ஒளிப்படத்தில் உடனிருப்பது திரைப்படக் கலைஞர் விஜயராஜ்.)
டி.எம்.எஸ். நூற்றாண்டு நிறைவு
Leave a Comment