‘நீட்’ தேர்வு அச்சம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

1 Min Read

அரியலூர், மார்ச்.23- அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 50), விவசாயி. இவருடைய மகன் கபிலன் (17). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிளஸ்-2 தேர்வை கபிலன் ஆர்வமுடன் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த கபிலன் தனது தந்தையிடம் மருத்துவம் படிக்க விரும் புவதாக தெரிவித்துள்ளார். எனவே ‘நீட்’ தேர்வுக்கு தனியார் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து படிக்க உங்களால் பணம் கட்ட முடியுமா? என்று கேட்டுள்ளார். அவரும் தன்னால் முடிந்த வரை செலவு செய்வதாக கூறியுள்ளார். இதனால் ‘நீட்’ தேர் வுக்கு தனியார் பயிற்சி மய்யத்தில் சேர்ந்து படிக்கமுடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் கபிலன் கடந்த சில நாட்க ளாக சோகமாக இருந்துள்ளார்.
தேர்வுக்கு தனியாக படிக்கப்போவதாக கூறிய கபிலன், தனது அறையின் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *