செவிலியர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி இரா.முத்தரசன் அறிக்கை

1 Min Read

அரசியல்

சென்னை,செப்.27- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கோவிட் 19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் மீண்டும் தங்களை பணியில் அமர்த்தவும் பணியை நிரந்தரப்படுத்தவும் வலியுறுத்தி தொடர்ச்சியாக கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 26.09.2023 அன்று தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்த லின்படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஒரு உயர்மட்ட குழு அமைத்து கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. போராடிய செவிலியர்கள் தங்கள்  உண்ணா நிலைப் போராட்டத்தை  முடித்துக் கொண்டுள்ளனர். போராடிய செவிலியர்களின் உணர்வை புரிந்து கொண்டு பிரச் சினையை தீர்ப்பதற்கு முன்வந்த தமிழ்நாடு அரசிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தனது அறிக்கையில் இரா. முத்தரசன் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *