கலைஞர் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சுய தொழில் ஆகியவைகளில் இடம் பெற்று பொருளாதாரத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்ற லட்சிய நோக்கில் பல வழிவகைகளை உருவாக்கி கொடுத்துள்ளார். அவைகளில் சில:
தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள கோயில்களை பழுது பார்க்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துகொடுத்தவர் கலைஞர்.
* தாழ்த்தப்பட்ட சமூக மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிப்போருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.400/-லிருந்து ரூ.500/-ஆக உயர்த்தி ஆணையிட்டார்.
*இந்திரா நினைவு வீடுகட்ட ரூ.55,000/-ஆக உயர்த்தி தரமான வீடுகள் கட்ட ஆணை பிறப்பித்தவர் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட சமூக விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுத்து விவசாயம் செய்ய ஏதுவாக 1000 பேருக்கு மின் இணைப்பு பெற உத்தரவு தந்தவர் கலைஞர்.
*தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சுயமாக தொழில்புரிய தாட்கோ மூலம் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசு நிதியுடன் மாநில அரசும் நிதி கொடுக்க ஆணை பிறப்பித்தவர் நமது கலைஞர்.
*மருத்துவம், பொறியியல் போன்ற மேல்படிப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு இதர செலவினம் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என அறிவித்தவர்தான் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தெருக்களில் 2008-2009ஆம் ஆண்டில் மட்டும் 10 சமுதாய கூடங்களை ரூ.100 லட்சம் செலவில் கட்டுவதற்கு ஆணை இட்டவர் கலைஞர்.
*தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் கடல் சார்ந்த வேலைவாய்ப்பு பெற வேண்டி 100 நபர்களுக்கு அனுமதி தந்தவர் கலைஞர்.
பிளம்பர், வெல்டிங், மரவேலை, ஓட்டுநர், கம்ப்யூட்டர் கற்றுத் தருதல் ஆகியவைகளையும் ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்றுத்தர ஆணையிட்டவர் கலைஞர்.
*தாழ்த்தப்பட்ட சமூக மாணவ, மாணவிகளுக்கும் பட்டய கணக்கர் செலவு கணக்கர் பயிற்சி இலவசமாக அளிக்க ஆணை தந்தவர் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட சமூக வகுப்பைச் சேர்ந்த 500 நபர்களுக்கு ரூ.75.00 லட்சம் செலவில் திருப்பூரில் பின்னலாடை பயிற்சி அளிக்கப்பட ஆணையிட்டவர் கலைஞர். (உறைவிடத்துடன் கூடிய பயிற்சி)
விமானப் பணி பயிற்சி, விமானப் பணியாளர் பயிற்சி 50 ஆண், மற்றும் 50 பெண்களுக்கு ரூ.100 லட்சம் செலவில் பயிற்றுவிக்க ஆணை இட்டவர் கலைஞர்.
*மருத்துவ பரிமாற்றம், செவிலியர் பட்டய பயிற்சி, கல்வியியல் பட்டய பயிற்சிக்காக தாழ்த்தப்பட்ட சமூக மாணவ, மாணவிகளுக்கு சலுகைகள் வழங்க ஆணையிட்டவர் கலைஞர்.
*கலைஞரின் தயவால் தாழ்த்தப்பட்டோர் நலத்துறையில் காலியாக இருந்த 963 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு உதவி செவிலியர் பயிற்சி அளிக்க வேண்டி 400 நபர்களுக்கு ரூ.77.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த 500 நபர்களுக்கு கனரக ஓட்டுநர் மற்றும் ஜெ.சி.பி. இயக்கக் கற்றுகொள்ளும் வகையில் ரூ.50 லட்சம் ஒதுக்கி ஆணையிட்டவர் கலைஞர்.
*மிகப் பெரிய அளவில் 10,000 தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பினர் பயன்பெற வேண்டி தேசிய நிறுவனங்களான சி.அய்.பி.இ.டி. மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க,ஆயத்த ஆடை தயாரிக்க ரூ.160 லட்சம் ஒதுக்கி பயிற்சி அளிக்க உத்தரவு வழங்கியவர் கலைஞர்.
தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவரும் விமானி ஆக வேண்டும் எனக் கருதிய கலைஞர் அவர்களுள் முதன் முதலாக 10 நபர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டி ரூ.100 லட்சம் ஒதுக்கீடு செய்தவர் கலைஞர்.
*கிராமப்புற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் இளைஞர்களும் ஆங்கிலத்தில் பேசும் திறமையை வளர்க்க தாழ்த்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி பயிலும் 100 இளைஞர்களுக்கு ரூ.30 லட்சம் செலவில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சிக்கு ஆணையிட்டவர் கலைஞர்.
*விவசாயிகளுக்கும், விவசாய கடன்களை பெற்றவர்களுக்கு மட்டுமே கலைஞர் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டாரே என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்காத பட்சத்தில் யாரும் கேட்காத சூழலில் கூட ஒரேயடியாக தாட்கோ மூலம் கடன் பெற்ற தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் தள்ளுபடி செய்து தாழ்த்தப்பட்ட மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது கலைஞர் அரசு.
*தாழ்த்தப்பட்ட சமூக மாணவ, மாணவிகளின் நலன் கருதி 2006 -2007ஆம் ஆண்டில் ரூ.13,61,95,000/- செலவில் 65,609 மிதி வண்டிகளை கலைஞர் அவர்கள் வழங்கினார். 2007-2008ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவிகளுக்கு அதாவது 71042 பேருக்கு ரூ.1502.79 லட்சம் செலவிலும், 63132 மாணவர்களுக்கு ரூ.1397.35 லட்சம் செலவிலும் மிதிவண்டிகளை வழங்கி தாழ்த்தப்பட்ட சமூக மக்களை வாழ்வாங்கு வாழச் செய்தவர் கலைஞர்.
*தாழ்த்தப்பட்ட சமூக மாணவ, மாணவிகளிடையே பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் 2006 -2007ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்புவரை பள்ளிகளில் வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணத்தை (Tution Fees) அறவே நீக்கியதன் காரணத்தினால் தாழ்த்தப்பட்ட மக்களில் சுமார் 10,73,199 பேர் பயனடைந்தனர்.
*இன்னும் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கலைஞர் அரசு கொடுத்த சலுகைகளையும், அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற அக்கறை கலந்த பாசத்தையும் பரிவையும். இதுபோன்ற எந்த ஒரு நலத் திட்டங்களையாவது வேறு யாராவது செய்ததுண்டா?